ஜவாஹிரியையும் கொல்வோம் : அமெரிக்கா திட்டவட்டம்!




tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperவாஷிங்டன்: பின்லேடனை கொன்றது போல அல்கய்தாவின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அல்-ஜவாஹிரியையும் கொல்வோம் என்று அமெரிக்கா கூறியுள்ளது. உலகையே அச்சுறுத்தி வந்த அல்கய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் பின்லேடனை, பாகிஸ்தானில் அமெரிக்கப் படைகள் சுட்டுக் கொன்றன. இதையடுத்து அல்கய்தா அமைப்பின் புதிய தலைவராக, பின்லேடனின் வலதுகரமாக விளங்கிய அய்மன் அல்-ஜவாஹிரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக நேற்று செய்திகள் வெளியானது.

இந்நிலையில் பின்லேடனை கொன்றது போல அல்கய்தா புதிய தலைவர் அல்-ஜவாஹிரியையும் கொல்வோம் என்று அமெரிக்கா திட்டவட்டமாக கூறியுள்ளது. பென்டகனில் பேட்டியளித்த அமெரிக்க ராணுவ உயரதிகாரி மைக் முல்லன் கூறுகையில், ‘‘ஒசாமாவுக்கு பிறகு ஜவாஹிரி புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக வந்த செய்திகள் ஆச்சரியமளிக்கவில்லை. இன்னும் அல்கய்தா அமைப்பு, எங்களை அச்சுறுத்தியே வருகிறது. பின்லேடனுக்கு நேர்ந்த கதிதான், ஜவாஹிரிக்கும் நேரும்’’ என்றார்.

முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...