பிரிட்டனில் அதிக குழந்தைகளுக்கு வைக்கப்பட்டுள்ள பெயர் 'முகம்மது'

யுனைட்டட் கிங்டம் ஆஃப் கிரேட் பிரிட்டன் (சுருக்கமாக யு.கே.) என்று அழைக்கப்பட்டும் பிரித்தானியாவில் புதிதாகப் பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு அதிகமாக வைக்கப்படும் பெயர் 'முகம்மது' என்று சமீபத்தில் எடுக்கப்பட்டுள்ள கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளதாக கார்டியன் நாளிதழ் கூறியுள்ளது.

இது கடந்த 14 வருடங்களாக முன்னணியில் இருந்த 'ஜாக்' (jack) என்ற பெயரை முந்தியுள்ளது. சென்ற வருடம் மூன்றாவது வரிசையில் 'முகம்மது' என்ற பெயர் இருந்தது. இந்த வருடம் அது முன்னிலைக்கு வந்துள்ளது.

இதுபோல 'ஓலிவியா' (Olivia ) என்ற பெண் குழந்தைகளுக்கான பெயர் கடந்த வருடத்தை போலவே இந்த வருடமும் முன்னிலையில் உள்ளது.

மொத்தம் 7549 ஆண் குழந்தைகளுக்கு 'முகம்மது' என்ற பெயர் பல்வேறு வித எழுத்து வடிவில் வைக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள பிரபல நாளிதழ் டெய்லி மெயில் தெரிவித்துள்ளது.

ஆனால் முகம்மது என்ற பெயர் ஆங்கிலத்தில் பல்வேறு தவறான எழுத்தில் (அதாவது Muhammad மற்றும் Mohammad) அமையாமல் Mohmmed என்ற சரியான ஆங்கில எழுத்தில் அமைந்து இருந்தால் இந்த கணக்கெடுப்பில் முகம்மது என்ற பெயர் இன்னும் அதிகரித்து இருக்கும் என்ற கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த கணக்கெடுப்பில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதியில் 16 வகையான எழுத்தில் அமைந்த முகம்மது என்ற பெயர் சேர்க்கப்படவில்லை.


முகம்மது என்பது முஹம்மத் என்ற சரியான உச்சரிப்பு கொண்ட அரபியில் அமைந்த பெயர். முகம்மது உலக முழுவதும் வாழும் 1.66 பில்லியன் (166 கோடி) முஸ்லிம்களின் கடைசி இறை தூதர் ஆவார். அவரது பெயரை முஸ்லிம்கள் உச்சரிக்கும் போதெல்லாம் கூடவே 'ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்' என்று சேர்த்து அழைப்பார்கள் .இதன் பொருள் "அல்லாஹ் தன்னுடைய தூதரான முஹம்மது மீது கருணையும் சாந்தியும் பொழிவானாக" என்பதாகும்.

இத்திஹாத் வழங்கும் இலவச விசா

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரம் அபுதாபியை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது இத்திஹாத் விமான நிறுவனம். இந்த விமான சேவை நிறுவனம் வாடிக்கையாளரைக் கவரும் வகையில் இலவச விசா வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தியாவின் எந்தப்பகுதியிலும் உள்ள விமான நிலையத்திலிருந்து அபுதாபி செல்பவர்கள் இந்தத் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்தத் திட்டத்தின் படி இந்தியாவிலிருந்து அபுதாபி செல்பவர்கள் இத்திஹாத் விமானத்தில் பயணச்சீட்டு வாங்கவேண்டும். அக்டோபர் 15 முதல் நவம்பர் 15 க்குள் இந்த பயணச்சீட்டை முன்பதிவு செய்ய வேண்டும். பயணத் தேதி அக்டோபர் 20 முதல் டிசம்பர் 15 வரைக்குள் இருக்க வேண்டும்.


14 நாள் விசா மற்றும் 30 நாள் விசா ஆகியவை இந்தச் சலுகையின் படி ஒருவர் பெற்றுக் கொள்ளலாம்.

பேங்க் இல் வேலை பார்பது ஹராமா ? ஹலாலா

'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு
எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான்
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி),
நூல்: முஸ்லிம்)

வட்டியை வாங்கி உண்ணுபவன், அதனை உண்ணச் செய்பவன், அதற்காகக் கணக்கு
எழுதுபவன், அதற்கு சாட்சியம் கூறும் இருவர் ஆகியோரை நபி(ஸல்) அவர்கள்
சபித்துள்ளார்கள். இன்னும் அவர்கள் அனைவரும் குற்றத்தில் சமமானவர்கள்
என்றார்கள்.

அறிவிப்பவர் ஜாபிர்(ரலி) நூல்: முஸ்லிம்
பேங்க் இல் வட்டி கட்டுவதும் வாங்குவது ஹராம் என்று ஓரளவு மக்களுக்கு
தெரியும் ....ஆனால் பலருக்கு பேங்க் இல் வேலை பார்பது ஹராமா ? ஹலாலா ?
என்ற விஷயத்தில் சர்ச்சை...... சிலர் ஹராம் என்கின்றனர் சிலர் ஹலால்
என்கின்றனர் .....இதற்கு இஸ்லாத்தின் உண்மை நிலை என்ன என்பதை குழும
சகோதர்கள் இதை பற்றி தெரிந்தவர்கள் குர்ஆன் மற்றும் ஹதீஸ் மூலம் தெளிவு
படுத்தவும்.....
வட்டி கொடுப்பவன் கொடுத்தால் தான் வட்டி வாங்குபவன் அதை வாங்குவான். எனவே
வட்டி வாங்குபவன், வட்டி கொடுப் பவன் ஆகிய இருவருமே குற்றவாளிகள் என
இஸ்லாம் கூறுகிறது. எழுதுபவன் சாட்சியானவர்கள் ஆகியோர் இவர்கள் செய்யும்
குற்றத்திற்குத் துணை போனதால் அவர்களையும் இஸ்லாம் குற்றவாளிக் கூண்டில்
ஏற்றுகிறது. மேலும் தெரிந்து கொண்டே அக்குற்றத்தைச் செய்வதால் அனைவரும்
குற்றத்தில் சமம் என்றும் தீர்ப்பளிக்கின்றது இஸ்லாம். எனவே வட்டி
வாங்கக் கூடாது என்பது மட்டுமல்லாமல் வட்டிக்காக எவ்விதத்திலும் துணையும்
நிற்கலாகாது என்பதையும் மனதில் அழமாகப் பதித்திட வேண்டும்.

இன்று வங்கிகளில் வேலை செய்யும் முஸ்லிம்களைப் பார்க் கின்றோம். அவர்கள்
இச்சட்டத்தைப் பற்றி நினைப்பது கூட இல்லை போலும். எனவேதான் அவர்கள்
அவ்வேலையைச் செய்து அழிவைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய உலகில்
வட்டியில்லா வங்கிகள் ஓரிரு இடங்களைத் தவிர்த்து எங்கும் இல்லை. எனவே
வட்டி முறையைக் கொண்டு இயங்கும் வங்கிகளில் வேலை பார்ப்பதை இஸ்லாம் தடை
செய்கிறது. எங்கேனும் வட்டியை அடிப்படையாகக் கொண்டு இயங்காத வங்கிகள்
இருக்குமானால் அதில் வேலை செய்யலாம். இஸ்லாம் அதைத் தடுக்கவில்லை. வட்டி
முறையில் இயங்கும் வங்கிகளில் வேலை பார்க்கும் உயர் அதிகாரி முதல்
வட்டித் தொடர்பான வேலை செய்யும் அனைவரும் குற்றத்தில் சமமானவர்கள் தான்.
எனவே வட்டி முறையில் இயங்கும் வங்கிகளில் எவ்விதப்பணியும் மேற்கொள்ளக்
கூடாது என்பது இஸ்லாமியச் சட்டமாகும்.

இஸ்லாமிய பெண்கள் அணியும் புர்காவுக்குத் தடை விதிக்க சிவசேனா கோரிக்கை!

"புர்கா அணிந்து கொண்டு சிலர் குற்ற செயல்களில் ஈடுபடுவதால் புர்கா அணிய அரசு தடை விதிக்க வேண்டும்" என்று சிவசேனா கட்சி புதிய முழக்கத்தை எழுப்பியுள்ளது.

இது குறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் வெளியாகியுள்ள ஒரு கட்டுரையில் ''சாந்தா குரூசில் உள்ள ஒரு மருத்துவமனையில் அக்டோபர் 15 அன்று இரண்டு மாத குழந்தை ஒன்று கடத்தப் பட்டதாகவும் ரகசிய கேமராவில் பதிவான காட்சியில் அதைக் கடத்தியவர் புர்கா அணிந்து இருந்ததாகவும் எனவே இது போன்ற குற்ற செயல்களைத் தடுக்க புர்கா அணிவதைத் தடை செய்ய வேண்டும்" என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

- கருத்துக்கள்
தவறான செயல்களில் ஈடுபடுவோர் சில சூழ்நிலைகளில் இது போன்று புர்கா அணிந்து கொண்டு தவறு செய்வதை கண்டிக்க வேண்டிய நிலையில் ஒரு மத நம்பிக்கையை தகர்க்கும் வகையில் கருத்து கூறும் சிவசேனா, காவி உடை அணிந்து கொண்டு காம களியாட்டங்களில் சிலர் ஈடுபடுவதால் காவி உடைக்கு தடை கோருமா?
ஏன்டா வீணாபோனவனே, காவி டிரெஸ்ஸ போட்டுகிட்டு சங்கராசாரி, பிரேமாநந்தா, நித்தியானந்தான்னு நீங்க அடிக்கிர கூத்துக்கு மொதல்ல அததான்டா தடைபண்ணனும்
//காவி உடை அணிந்து கொண்டு காம களியாட்டங்களில் சிலர் ஈடுபடுவதால் காவி உடைக்கு தடை கோருமா? //

ஆமா.. காவி உடையையும் தடை செய்ய சிவசேனா போராட்டம் நடத்தனும்.. அப்ப இந்த ஆளு எந்த கலர் டிரஸ் போடுவார்?

சென்னையில் இருந்து முதல் ஹஜ் குழு புறப்பட்டு சென்றது - மு.க.ஸ்டாலின் வழியனுப்பி வைத்தார்

சென்னயைில் இருந்து ஹஜ் பயணம் செல்லும் முதல் குழு புதன் கிழமையன்று புறப்பட்டுச் சென்றது. 460 பயணிகளுடன் சென்ற முதல் குழுவை தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பி.ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.

முஸ்லிம்கள் தங்கள் 5 கடமைகளில் ஒன்றான புனித ஹஜ் பயணத்தை நிறைவேற்றுவதற்காக, சவுதி அரேபியாவில் உள்ள மக்கா நகருக்கு புனித பயணம் செல்வார்கள். இந்த ஆண்டு தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் ஆகிய பகுதிகளில் இருந்து 5022 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த புனித ஹஜ் பயணத்திற்காக 11 விமானங்கள் இயக்கப்படுகின்றன. முதல் விமானம் சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் 460 பேர் சென்றனர்.

ஹஜ் பயணத்திற்கு சென்றவர்களை தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி, அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான் ஆகியோர் சால்வைகளை தந்து புனித பயணம் சிறப்பாக அமைய வாழ்த்து கூறி வழியனுப்பி வைத்தனர். இந்திய ஹஜ் கமிட்டி துணை தலைவரும், தமிழக ஹஜ் கமிட்டி தலைவருமான பிரசிடென்ட் அபூபக்கர், இந்திய குழு செயல் அலுவலர் டாக்டர் ஜாகீர் உசேன், தமிழக அரசு செயலாளர் அலாவுதீன் ஆகியோரும் அவர்களை வாழத்தி அனுப்பி வைத்தனர்.

பால்தாக்ரே எனக்கு கடவுள் மாதிரி: வெளுத்தது ரஜினியின் காவி முகம் சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்ரேயிடம் ஆசிபெறுவதற்காக இன்று (5-10-2010) மட்டோஷ்ரியில்


இணையதளத்தில் கனவன்-மனைவி அந்தரங்க உரையாடல் - ஒரு அதிர்ச்சிரிப்போர்ட்
>>>
>>>
>>>
>>>
>>>சகோதர சகோதரிகளே
>>>
>>>
>>>உங்கள் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக
>>>
>>>நாம் நம் குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கக்கூடிய நிலை ஏற்பட்டால் உணர்ச்சி
>>>மிகுதியால் சில நேரம் நம்முடைய துணையிடம் / காதலியிடம் / நிச்சயம் முடிக்கப்பட்ட
>>>பெண்ணிடம் தொலைபேசியில் / கைப்பேசியில் / இணை தொலைபேசி என்று சொல்லக்கூடிய வாய்ப்
>>>பேசிகளில் (Voip Phones) பேசும் போது எல்லை மீறி அந்தரங்க விஷயங்களை பேசி
>>>விடுகிறோம். இது யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்றோ அல்லது யாரும் இந்த
>>>பேச்சுகளை ஒட்டு கேட்க முடியாது என்றோ நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால்
>>>அப்படி நீங்கள் யாரேனும் நினைத்திருந்தால் தயவு செய்து அந்த எண்ணத்தை மாற்றிக்
>>>கொள்ளுங்கள்.
>>>
>>>
>>>
>>>என்னுடைய ஆசிரியர் சொன்னதை இங்கு நினைவு கூற ஆசைப்படுகிறேன். அதாவதுஅறிவியல் வளர
>>>வளர சௌகரியங்கள் வளரும், ஆனால் இறுதியில் அந்த அறிவியல் அழிவுக்கே வழிவகுக்கும்”.
>>>இது எப்படி அழிவுக்கு வழி வகுக்கும் என்ற சிந்தனைக்கு போகாமல் நம்முடைய
>>>தலைப்புக்கு வருவோம். சமீபத்தில் அப்படி தாறுமாறாக நிதானம் இழந்து தன்னுடைய
>>>துணையிடம் பேசியதை இண்டெர்நெட்டில் கேட்டு விட்டு அதிர்ந்து விட்டார் ஒரு நண்பர்.
>>>அதை அவருடைய துணையிடம் சொல்லி நக்கீரனில் புகார் கொடுக்க சொல்லியிருக்கிறார். அது
>>>சம்பந்தமாக நக்கீரனில் வெளிவந்திருக்கும் செய்தி தொகுப்பு:
>>>
>>>
>>>
>>>"நெட்மூலம் பகிரங்கமாகிக்கிட்டு இருக்கும் என் மானத்தை நக்கீரன்தான்
>>>காப்பாத்தணும்'’’என்றபடி நம்மிடம் கண்ணீருடன் வந்தார் அந்த இளம் குடும்பத்தலைவி.
>>>துணைக்கு தன் அக்காவையும் அழைத்துவந்திருந்த அவரிடம் ஏகத்துக்கும் பதட்டம்.
>>>
>>>
>>>
>>>"முதல்ல கவலையை விடுங்க. என்ன பிரச்சினை? உங்க படத்தை யாராவது...?'’ என நாம்
>>>முடிக்கும் முன்பே...
>>>
>>>
>>>
>>>""இல்லைங்க. எனக்கு கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம்தான் ஆகுது. கல்யாணமான நாலாவது
>>>மாசமே என் கணவர் குவைத் போயிட்டார். என் மேல் அளவுகடந்த காதல் அவருக்கு. அதனால்
>>>இரவு நேரங்கள்ல எங்கிட்டே ரொமாண்டிக்கா பேசுவார். என்னையும் அவர் அளவுக்கு பேசவைப்
>>>பார்..''’சொல்லும்போதே அவர் கண்கள் சங்கடம் கலந்த பயத்தில் தவித்தது.
>>>அவரைத்தேற்றும் விதமாக நாம்..
>>>
>>>
>>>
>>>"சரி விடுங்க. இது பல இடங்கள்ல நடக்குறதுதானே... இதில் என்ன பிரச்சினை?'’
>என்றோம்.
>>>
>>>
>>>அந்த குடும்பத் தலைவி, அடுத்து சொன்ன தகவல் நம்மை ஏகத்துக்கும் அதிரவைத்தது.
>>>
>>>
>>>"அவரும் நானும் ரொமாண்டிக் மூடில் எல்லை மீறி பேசிய கிளுகிளு பேச்சுக்கள்... இப்ப
>>>இண்டர் நெட்டில் வருதாம். யாரோ ஒரு கிரிமினல் பேர்வழி... எங்களுக்கே தெரியாமல்...
>>>எங்க பேச்சை ரெக்கார்டு பண்ணி... இப்படிப் பண்ணியிருக் கான். இதை என்
>>>வீட்டுக்காரர்தான் பார்த்துட்டு... அதிர்ந்துபோய்... எனக்குத் தகவல் சொன்னார்.
>>>கூடவே "நக்கீரன்ட்ட உதவி கேள்'னும் சொன்னார். அதான் வந்தேன்''’என்று நம்மை
>>>அதிரவைத்த வர்... அந்த இணையதள முகவரியையும் நம்மிடம் கொடுத்தார்.
>>>
>>>
>>>
>>>அவருக்கு ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்த நாம்... அவர் சொன்ன விவகாரமான இணையதளத்தை
>>>கவனித்தோம்.
>>>
>>>
>>>கணவன்- மனைவிகள், காதல் ஜோடிகள், கள்ள உறவு ஜோடிகள் என பலதரப்பட்ட ஆண் -பெண்களின்
>>>லச்சையற்ற அப்பட்டமான உரையாடல்கள்... அங்கே பதியப்பட்டிருந்தன. காதுகள் கூசும்
>>>அளவிற்கு... பலரும் தங்களது அந்தரங்க உணர்வுகளை யார் கவனிக்கப்போகிறார்கள் என்ற
>>>தைரியத்தில்.. தங்கள் பார்ட்னர்களிடம் செல்லச் சீண்டல் சிணுங்கல் சகிதமாய்ப்
>>>பகிர்ந்துகொண்ட விஷயங்கள்... அங்கே தோரணம் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தன.
>>>
>>>
>>>
>>>உரையாடல்களிலேயே இப்படி ஒரு மன்மத உலகமா? என திகைத்துப்போன நாம்...
>>>
>>>
>>>நமக்குத் தெரியாமல் நாம் செல்போனில் பேசுவதை தனி நபர் ஒருவரால் ரெக்கார்டு
>>>செய்யமுடியுமா? என விசாரிக்க ஆரம்பித்தோம்.
>>>
>>>
>>>பிரபல மொபைல் கம்பெனியில் டெக்னிக்கல் பிரிவு உயர் அதிகாரியாகப் பணிபுரியும்
>>>அவரைத் தொடர்புகொண்டோம். அந்த அதிகாரியோ... ஒரு குபீர்ச் சிரிப்பை
>>>உதிர்த்துவிட்டு... ""இந்த மாதிரியான பேச்சுக்கள் 3 விதமா பதிவாக வாய்ப்பிருக்கு.
>>>
>>>
>>>
>>>முதல் வகை... நீங்களோ, நானோ மொபைல்ல ரெக்கார்டிங் வாய்ஸ் சாஃப்ட்வேர்கள இன்ஸ்டால்
>>>பண்ணிக்கிட்டோம்ன்னா நமக்கு வர்ற இன்கம்மிங், அவுட்கோயிங் கால்கள் தானா துல்லியமா
>>>பதிவாயிடும். இதில் பெரிய பிரச்சினை இல்லை.
>>>
>>>
>>>இரண்டாவது, எங்களை மாதிரியான செல்போன் நிறுவனங்கள் கஸ்டமர்களின் பிரச்சினைகள
>>>தீர்த்து வைக்க 24 மணி நேரமும் இயங்கும் கால்சென்டர்கள உருவாக்கி வச்சிருக்கு.
>>>இந்த கால்சென்டர்கள்ல பணிபுரியும் ஒருத்தர் நினைச்சா... யார் பேச்சை வேணும்னாலும்
>>>ரெக்கார்ட் பண்ணமுடியும். பொதுவா நைட் ஷிப்டில் அதிக வேலையிருக்காது. அப்ப
>>>டூட்டியில் இருக்கறவங்க... நீண்ட நேரமா ஒரு கால் பேசப்படுதுன்னா அவுங்க என்ன
>>>பேசறாங்கன்னு ஒட்டு கேட்க முடியும். நைட்ல கள்ளக்காதலர்கள், கணவன்-மனைவி,
>>>காதலர்கள் உணர்ச்சியோட கிளுகிளுப்பா பேசுவாங்கங்கற ரகசியம் எல்லோருக்கும்
>>>தெரிஞ்சதுதானே. இந்த மாதிரி பேச்சுக்களை கேட்டுக்கேட்டு கிக் ஆகற சிலர்
>>>இருக்கத்தான் செய்றாங்க. அப்படி ரெக்கார்ட் பண்ணியது அப்படியே பரவி நெட் வரைக்கும்
>>>வர வாய்ப்பிருக்கு.
>>>
>>>
>>>
>>>மூணாவதா சில குறிப்பிட்ட இணையதளங்கள், "உங்களுக்காக எங்களது பெண்கள்
>>>காத்திருக்கிறார்கள். அவர்களிடம் நீங்கள் எதைப்பற்றி வேண்டுமானாலும் கேட்கலாம்,
>>>செக்ஸ் பற்றி மற்றவர்களிடம் பேச தயங்குவதை இவர்களிடம் பேசலாம்'னு குறிப்பிட்டு 12
>>>இலக்க எண் தந்திருப்பாங்க. அதுல ஏதாவது ஒரு நம்பர காண்டக்ட் பண்ணி பேசனிங்கன்னா
>>>நீங்க பேசற கிளுகிளு பேச்சை நமக்கே தெரியாம ரெக்கார்ட் பண்ணி நெட்ல
>>>போட்டுடுவாங்க. இது காசு கொடுத்து நமக்கு நாமே சூன்யம் வச்சிக்கறதுக்கு
>>>சமம்''’என்றார் விரிவாக.
>>>
>>>
>>>
>>>பெண்களுடன் செக்ஸ் உரையாடல்களுக்கு அழைப்பு விடுக்கும் அந்த கிளுகிளு இணையதளங்கள்
>>>குறித்தும் விசாரித்தோம். அதில் கையைச் சுட்டுக்கொண்ட ஒரு நண்பர் தன் அனுபவங்களை
>>>சங்கோஜத்துடனே சொல்ல ஆரம்பித்தார். ""பொதுவா செக்ஸ் வெப்ஸைட்டுகள்ல நான்
>>>உலவிக்கிட்டு இருந்தப்ப... "எந்த நேரத்திலும் மனதில் இருக்கும் ஆசைகளை உரையாடல்
>>>மூலம் இந்தப் பெண்களுடன் பகிர்ந்துகொள்ளலாம்'னு ஒரு வெப்ஸைட் கூவியழைத்தது. அதில்
>>>உடம்பைத் திறந்து போட்டிருந்த ஒருத்தியைப்... படத்தைப் பார்த்தே... கிளுகிளு
>>>உரையாடலுக்கு செலக்ட் பண்ணி அவங்க கொடுத் திருந்த .எஸ்.. எண்ணில் தொடர்பு
>>>கொண்டேன்.
>>>
>>>
>>>
>>>எடுத்த எடுப்பிலே "என் பேரு நந்தினி. மும்பையில காலேஜ் படிக்கறேன். என் சொந்தவூர்
>>>சென்னைதான். உங்களோட செக்ஸா பேசணும்னு ஆசையா இருக்கு' என்றவள்.... தன் உடல்
>>>பாகங்களை வர்ணித்து... அதில் உள்ள மச்சங்களை யும் சொல்லி கண்டபடி கிக் ஏத்தினாள்.
>>>இப்படி அவளோடு 22 நிமிடம் உரையாடல் நீண்டது. அந்த மாத பில் வந்தபோது மயக்கம்
>>>வந்துவிட்டது. காரணம் அந்த 22 நிமிட பேச்சுக்கு 3,050 ரூபாய் சார்ஜ்
>>>ஆகியிருந்தது. நொந்துபோய் இதுபற்றி விசாரித்த போது இணையதளத்தரப்பும் தொலை
>>>பேசித்தரப்பும் கூட்டு சேர்ந்து என்னை மாதிரியான சபல பார்ட்டிகள்கிட்ட பணம்
>>>புடுங்க இந்த மாதிரி பண்ணிக்கிட்டிருக்காங்கன்னு தெரிஞ்சிது. லோக்கல் கால்களை
>>>.எஸ்.டி கால்களா மாத்தித்தான் பணம் புடுங்குறாங்க.
>>>
>>>
>>>
>>>என்னை மாதிரி தினம் தினம் எத்தனைபேர் இப்படி... பணத்தை அந்த ஆபாசக் கும்ப லிடம்
>>>பறிகொடுத்துக் கிட்டு இருக்காங்களோ''’ என்றார் எரிச்சலாக.
>>>
>>>
>>>வழக்கறிஞரான ரமேஷ்கிருஸ்ட்டி நம்மிடம் ""சென்னை ரிச்சி ஸ்ட்ரீட்டில் குளோனிங்
>>>செல்லை உருவாக்கித்தர்றாங்க. இது எதுக்குன்னா கணவன் மீது மனைவிக்கோ... அல்லது
>>>மனைவி மீது கணவனுக்கோ சந்தேகம் இருந்தா... அவங்க சிம் கார்டைக் கொடுத்து அதே
>>>நம்பருக்கான குளோனிங் சிம்கார்டை வாங்கிக்கலாம். சம்பந்தப்பட்டவங்க யார்ட்ட
>>>பேசினாலும் இந்த குளோனிங் சிம் போட்ட செல்போனிலும் கேட்கும்.
>>>
>>>
>>>
>>>இப்படி ஒரு வியாபாரம் அங்க நடக்குது. அதேபோல்... இன்னொரு விஷேச ஆண்டனாவையும் அங்க
>>>விக்கிறாங்க. அந்த மினி சைஸ் ஆண்டனாவை வீட்டு மொட்டை மாடியில பொருத்திட்டா
>>>போதும்... அக்கம் பக்கத்தலயிருக்கற செல்போன் லைன்களுக்கு வர்ற அத்தனை கால்களையும்
>>>ஒட்டுக்கேட்டு.. ரெக்கார்டும் பண்ணமுடியும். இதன் மூலம் சின்னஞ்சிறிய ஜோடிகள்,
>>>தம்பதிகள், லவ்வர்கள் இவங்க அந்தரங்க உரையாடல்கள் கொள்ளையடிக்கப்படுது.
>>>
>>>
>>>
>>>இந்த குளோனிங் செல்போனை அவங்க 20 நிமிசத்தில் ரெடிபண்ணிக் கொடுக்குறாங்க. இதுக்கு
>>>சார்ஜ் 3,500 ரூபாயாம். நாடு எங்கேயோ போய்க்கிட்டு இருக்கு. இந்த மாதிரியான
>>>டேஞ்சரஸ் விவகாரங்களை உடனே அரசாங்கம் தடுக்கணும்'' என்றார் கவலையாக.
>>>
>>>
>>>
>>>சென்னையில் உள்ள சைபர் க்ரைம் பிரிவு .சி. சுதாகரிடம் இதுபற்றி நாம்
>>>கேட்டபோது..."மொபைல்ல சாஃப்ட்வேர்ஸ் இன்ஸ்டால் பண்ணி ரெக்கார்ட் பண்ணிக்கறது
>>>அவுங்களோட தனிப்பட்ட விருப்பம். ஆனா அத வச்சி மிரட்டறது, வெளியிடறது குற்றம்.
>>>இதுக்கு கடுமையான தண்டனையுண்டு. நம் பேச்ச மொபைல் கம்பெனிங்க ரெக்கார்ட் பண்ண
>>>வாய்ப்பு குறைவு. குளோனிங் சிம், மினி ஆண்டனாவெல்லாம் புது விவகாரமாயிருக்கு.
>>>இதனால பெரிய பிரச்சினைகள் வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. நாங்க இத தீவிரமா
>>>கண்காணிக்கிறோம்''’ என்றார் உறுதியான குரலில்.
>>>
>>>
>>>
>>>மொபைல் போனில் பேசும் முன் யோசித்து பேசுங்கள். இல்லையேல்.... உங்கள் அந்தரங்கமும்
>>>நாளை உலகமெங்கும் உலா வரலாம்.
>>>
>>>
>>>
>>>இது சம்பந்தமாக சைபர் க்ரைம் ஸ்பெஷலிஸ்ட்டான அட்வ கேட் ராஜேந்திரனோ...
>>>""வெளிநாட்டிலுள்ள கணவனிடம் மனைவி தன் ஆசைகளையும், ஏக்கம் விருப்பங்களையும்
>>>வெளிப்படுத்தி சந்தோஷமாகப் பேசுவது உண்டு. இளம் பெண்கள் அப்பா, அம்மாவிடம்
>>>பகிர்ந்து கொள்ளாத விஷயங்களைக் கூட தோழிகளிடம் பகிர்ந்து கொண்டு பேசுவதுண்டு.
>>>
>>> காதலர்கள் கொஞ்சிக் குலவுவது மட்டுமில்லாமல், கள்ளக் காதலியிடமோ, கள்ளக்
>>>காதலனிடமோ கிளுகிளுப்பாக ஃபோனில் பேசுவது உண்டு. இதையெல்லாம் ஒருவன் ஒட்டுக்
>>>கேட்டு அதை ரெக்கார்டும் செய்கிறான் என்றால் என்ன நடக்கும்? ஆண்களிடம்
>>>ப்ளாக்மெயில் செய்து பணமும், பெண்களிடம் கற்பையும் சில கில்லாடிகள் களவாட
>>>வாய்ப்பிருக்கிறது. இதைவிட டேஞ்சரஸ் என்னன்னா... டெரரிஸ்ட்டுகள் நம்ம சிம்கார்டை
>>>குளோனிங் சிம்கார்டாக்கி விட்டால் அவ்வளவுதான். போலீஸிடம் நாம்தான் மாட்டிக்கொள்ள
>>>வேண்டிய சூழல்.
>>>
>>>
>>>
>>>ஆக,
>>>
>>>ஒவ்வொரு மாதமும் பில்தொகை எவ்வளவு வருது என்பதை "செக்' பண்ணணும்.
>>>
>>>நமக்கு அறிமுகமே இல்லாத செல் நம்பருக்கு கால் போயிருந்தாலோ, ராங்-கால் வந்து நாம்
>>>கட் பண்ணியிருப்போம்... ஆனாலும் தொடர்ந்து பேசியதுபோல பில் வந்திருந்தாலோ,
>>>
>>>நாம் எந்த நம்பருக்கும் எஸ்.எம்.எஸ். அனுப் பாமலேயே "டெலிவர்டு' ஆனது போல ரிப்ளை
>>>வந்தாலோ அலட்சியப்படுத்த வேண்டாம்.
>>>
>>>
>>>உடனடியாக காவல் துறையில் புகார் கொடுத்து கண்காணிக்க வேண்டும்.
>>>
>>>சிம்கார்டை யாரிடமும் கொடுக்காமல் கேர்ஃபுல்லாக இருக்க வேண்டும். ஒருவேளை
>>>சிம்கார்டு தொலைந்து போனாலும் புகார் கொடுத்து "லாக்' பண்ணிவிட வேண்டும்.'' என்று
>>>உஷார்படுத்துகிறார் அவர்.
>>>
>>>
>>>
>>>நன்றி : நக்கீரன்
>>>
>>>
>>>சகோதர சகோதரிகளே, நம்மில் பலரும் இது போன்ற செயல்களை தினமும் செய்து
>>>கொண்டிருக்கிறோம். இது எங்கோ நடக்கிறது, நமக்கேன் கவலை என்று இருந்து விடாதீர்கள்.
>>>இதை எச்சரிக்கையாக எடுத்து உங்கள் வாழ்க்கையில் முதலில் கடைபிடியுங்கள்.
>>>தொலைபேசியில் / கைப்பேசியில் / இணை தொலைபேசி என்று சொல்லக்கூடிய வாய்ப் பேசிகளில்
>>>(Voip Phones) எல்லை மீறி நிதானம் இழந்து மனைவி தானே என்றி நினைத்து அந்தரங்க
>>>விஷயங்களை எக்காரணம் கொண்டும் பேசாதீர்கள், அப்படி பேசுமாறு உங்கள் மனைவியோ /
>>>காதலியோ / நிச்சயமுடிக்கப்பட்ட பெண்ணோ உங்களை வற்புறுத்தினால் விஷயத்தின்
>>>விபரீதத்தை சொல்லி புரிய வையுங்கள். இதை உங்கள் நண்பர்களுக்கும், நல
>>>விரும்பிகளுக்கும் சொல்லி புரிய வையுங்கள். திருமணமான புதிதில் எல்லோருக்கும்
>>>இருக்கும் பிரச்சனை தான், ஆனால் நாம் உஷாராக இல்லாது போனால் நம்முடைய
>>>அந்தரங்கமும் இணையதளத்தில் வெளிவந்து அதன் பின் வருத்தப்பட நேரிடும்.
>>>
>>>
>>>
>>>தோழமையுடன்
>>>அபு நிஹான்


======================================================================================
சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்ரேயிடம் ஆசிபெறுவதற்காக இன்று (5-10-2010) மட்டோஷ்ரியில் உள்ள அவரது இல்லத்திற்கு நடிகர் ரஜனிகாந்த் சென்றிருந்தார்.
பால்தாக்ரேயின் சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் ரஜினகாந்த்
பால்தாக்ரே கடவுளுக்கு நிகரானவர் அவர் எனக்கு கடவுள் மாதிரி எனக் தெரிவித்துள்ளார். பி.டி நியுஸ்

ரஜினிகாந்த மஹாராஷ்ட்டிரிய தம்பதிகளுக்கு பிறந்தவர் என்பது குறிப்பிடதக்கது.

இப்ப மேட்டருக்கு வருவோம்

மேற்கண்ட செய்திக்கு மேலதிக விளக்கம் தேவையில்லை எனினும் நம் இஸ்லாமிய சமூக இளைஞர்களுக்காக ஒரு சில வரிகள்..

இன்றைக்கு எத்தனையோ முஸ்லிம் இளைஞர்கள் உடல் மண்ணுக்கு உயிர் ரஜினிக்கு எனக் கூறி தனது இளைய பருவத்தை வீணடித்துக் கொண்டிருகின்றனர். யார் இந்த ரஜினிகாந்த என்ற உண்மையை இந்த முஸ்லிம் சமுதாய இளைஞர்கள் உணர வேண்டும். முஸ்லிம் இனமே இந்தியாவில் இருக்கக்கூடாது என்பதை அடிப்படை கொள்கையாக கொண்டுள்ள பாசிச இயக்கத் தலைவன் தான் பால் தாக்ரே. இந்த பால்தாக்ரே தான் ரஜினிக்கு கடவுளாம்.

அப்படி எனில் கடவுளின் கொள்கையை (பாசிசம்) தான் பக்கதனும் (ரஜினி) பின் பற்றுவார் என்பது இதிலிருந்து தௌ்ளத் தெளிவாகத் தெரிகின்றது

பால் தாக்ரே கடவுள் மாதிரி என பகிரங்கமாகக் பேட்டியளித்து தனது பாசிச சிந்தனைக் கொண்ட காவி உருவத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார் ரஜினகாந்த்.

நீ ரஜினி கட்அவுட்டிற்கு பாலபிஷேகம் செய்வது உனக்கு நீயே சாவுமணி அடித்துக் கொள்வதற்கு சமம்..

நீ தியேட்டர் சென்று படம் பார்கும் பணமமெல்லாம் உன்னை அழிக்க நினைக்கும் சக்திகளுக்கு நன்கொடையாக போகின்றது..

இனிமேலாவது திருந்துவார்களா நமது இஸ்லாமிய சமூக இளைஞர்கள்?

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ராமனா? பாபரா? நாட்டை இடித்தவன் யாரெனச் சொல்..!



அயோத்தி தீர்ப்பு வெறும் இடப்பிரச்சனையோ, ஆவணங்களின் அடிப்படையிலான பிரச்சனையோ அல்ல. மக்களின் உயிரோடும் உடமைகளோடும் தொடர்புடையது. எனவே தான் நீதிபதிகள் இடத்தைப் பிரித்துக்கொடுத்து தீர்ப்பு எழுதியிருக்கிறார்கள் என்று பார்ப்பன பாசிச கட்டைப்பஞ்சாயத்து தீர்ப்புக்கு சப்பைக்கட்டு கட்டும் இந்துவெறியர்களுக்கு இதைச் சொல்லிக்கொள்கிறோம். தானும் இந்து என்று அப்பாவித்தனமாக நம்பிக்கொண்டிருப்பவர்கள் இதை படித்துப்பார்த்துக் கொள்ளட்டும்.



நீளமான இக்குறிப்புகளை தேடி எடுத்து ஒருங்கே தொகுத்து டிவிட்டரிலும் கூகுளிலும் உலவவிட்டு சாதனை படைத்திருக்கும் தோழர் மணி, தோழர் ஏழரை ஆகியோருக்கு மிக்க நன்றி..! முடிந்தவரை இதை நிறைய பேருக்கு அனுப்பி உண்மை புரிய வையுங்கள்.!!



சுயசரிதை எழுதுவோரின் இளவரசன் என்பதுதான் ஜஹருத்தீன் ஷா பாபருக்கு வழங்கிய பட்டப்பெயர்.

உலக தன் வரலாற்று ஆவணத்தின் உண்மைத்தன்மையில் இலக்கிய தரத்தில் ரூசோவுக்கும், செய்ண்ட அகஸ்டசுக்கும் அடுத்த இடம் பாபருக்குதான்.

னது பலவீனத்தை தோல்வியை தடுமாற்றத்தை பாபர் போல வேறு எந்த அரசனும் பதிவு செய்யவில்லை.

டெல்லி தேசிய அருங்காட்சியகத்தில் இன்றும் தனது மகனுக்கு அவர் எழுதிய உயில் காட்சிக்கு உள்ளது.

இந்துக்களின் மனம் புண்படாமல் இருக்க பசு மாமிசம் சாப்பிடுவதை தன் மகனை கைவிடச் சொல்கிறார் பாபர்.

மாற்று மத வழிபாட்டுத் தலங்களை அவமதித்து விடாதே என்றும் ஹிமாயூனுக்கு எழுதிய உயிலில் பாபர் கூறுகிறார்

திரேதா யுகம் முடிவுக்கு வந்தது கிமு 3102 இல். திரேதா யுகத்தில் பிறந்தவன் ராமன் என்கிறது இந்து மதம், ஆனால் கிமு 700 க்கு முன் அயோத்தியில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றே இல்லை என்கிறது அகழ்வாராய்ச்சி.

பௌத்த இலக்கியமான தசரத ஜாதக கதையில் இருந்து இரவல் பெற்றுதான் கிமு 500 இல் வால்மீகி ராமாயணம் எழுதினான்.

ஒரு மனைவியை திருப்திபடுத்த மற்ற மனைவியின் மூத்த மகனான ராமனை காட்டுக்கு அனுப்புவான் தசரதன்.

அவனை அவனது சகோதர சகோதரிகளான லட்சுமணனும் சீதையும் பின்தொடர்வர் என்கிறது அந்த சாதக கதை

தந்தை இறந்த பிறகு வாரணாசிக்கே மீண்டும் வந்து சகோதரி சீதையை மணந்து ஆள்வான் ராமன். சமநிலை பிறழாதவன் என்பதுதான் அவனது சிறப்பு.

வால்மீகி இந்த கதையை சுட்டு இமயமலையை விந்தியமலையாக்கினான். ஆனால் விஷ்ணு அவதாரம் என மறந்தும் அவன் சொல்லவில்லை

சீதை கடத்தப்பட்ட கதை: இலியட் ம் ஓடிசியும் வாய்மொழியாக வணிகத்துடன் இந்தியா வந்தது, வால்மீகி இறந்து 700 ஆண்டுகளுக்கு பிறகுதான் ராமாயணத்தில் ராமன் விஷ்ணு அவதாரம் என சேர்க்கப்படுகிறது # நாகார்ஜூனா

கோசல நாட்டின் முக்கிய நகரங்களாக சரஸவதியும் சாகித்தாவும் திகழ்ந்த்து. அன்றைய அயோத்தி கங்கைகரையில் இருந்தது என்கிறது பௌத்த சமண இலக்கியங்கள்.

தற்போதைய அயோத்தி மேற்கிலிருந்து கிழக்காக பாயும் சரயூ நதிக்கரையில் உள்ளது. வால்மீகி அந்த ஆறு கிழக்கிலிருந்து மேற்காக பாயும் என்கிறான்.

அப்படி ஒரு ஆறு இன்றும் நேபாளத்தில் உள்ளது மக்கள் நடமாட்டம் கிமு 700 ல் ஆரம்பிப்பதற்கு முன் ஆண்டுக்கு 50-60 அங்குல மழை பொழியும் பிரதேசம் அயோத்தி.

அந்த காடுகளை திருத்தி நகரம்அமைக்க இரும்பு பயன்பட்டிருக்க வேண்டும். ஆனால் கிமு 700க்கு முந்திய ஒரு இரும்புதுண்டு கூட அயோத்தியில் சிக்கவில்லை

இதனை ஆர்க்யாலஜிகல் சர்வே ஆப் இந்தியா வெளியிட்ட 1976-77 ரெவியூவில் பக்கம் 52, 53 இல் அறிவியல் சொல்லி உள்ளது #Indian Archeology – Areview 1979-80 page 76, 77 – cofirms the research-done by BB Lal, KN Thetchikth

சரி ராமர் கோவில யார் கட்டுனா என்றால் விகரமாதித்தர் என்கிறார்கள். 1975 இந்திய தொல்பொருள் துறை இயக்குநர் பிபி லால் ஆய்வு வேறு முடிவை தந்தது

விக்ரமாதித்தர் எனப்படும் இரண்டாம் சந்திரகுப்தன் காலம் கிபி 379-413. இன்னோரு விக்ராமாதித்த ஸ்கந்த குப்தன் காலம் கிபி 455-467.

ஆனால் ஆய்வில் அயோத்தியில் குப்தர்கள் ஆண்டதற்கு ஆதாரமே கிடைக்கவில்லை. காரணம், கிபி 300-1100 ல் மனிதர்களே அயோத்தியில் வாழவில்லை

12 ஆம் நூற்றாண்டுக்கு முன் அயோத்தியில் இன்று உள்ளது போல 18 கோயில் என்ன ஒரு கோயில் கூட ராமனுக்கு இல்லை, ஏனெனில் ராமன் அன்று இந்துக் கடவுளாக கூட அங்கீகரிக்கப்படவில்லை.

கிபி ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த அமரசிம்ஹா எழுதிய அமரகோசா என்ற சமஸ்கிருத சொல்லகராதியில் கடவுளர்களின் பெயரில் தப்பித்தவறி கூட ராமன் இல்லை

இந்துக்களின் புனித தலங்களை தனது தீராத் விவேகானி கலாப் இல் பட்டியலிட்ட 11 ஆம் நூற்றாண்டின் லட்சுமிதார் அதில் அயோத்தியை குறிப்பிடவில்லை

எஸ்எஸ் ஐயர் என்ற ஹிந்து அறிஞர் எழுதிய ஆய்வுக்குறிப்பேட்டு புத்தகத்தில் விக்ரமாதித்தன் எழுப்பிய திக்கவா, எர்நாக், சான்சி, பாம்ரா, நாச்னா போன்றஇடங்களை பட்டியலிட்டார். ஏழு அடுக்கும் 84 கருப்பு கசவடி தூணையும் கொண்ட ராமர் கோவிலை அயோத்தியில் விட்டு விட்டார். இல்லையா?

பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை ராமனை யாரும் வணங்கவில்லை. பாபரின் சமகாலத்தில் வாழ்ந்த துளசிதாசரின் இந்தி ராமாயணத்திற்கு பிறகுதான், அதுவும் மக்களது கதையாடல்களும் இணைக்கப்பட்டதால்தான் (எந்திரன் ரஜினி போல ஜாக்கி வைத்து) ராமன் தூக்கப்பட்டார்

ராமர் கோவில் இடித்தாக சொல்லப்படும் 1528ல் துளசிதாசருக்கு 30 வயது. சிரிராம சரித்மானஸ் என்ற அவரது காவியத்தில் இதுபற்றி ஏன் அவர்எழுதவில்லை?
இதனை சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் மகன் வரலாற்றாசிரியர் கோபால் கேட்கிறார்.

பாபரின் வடிவில் மரண தேவனை அனுப்பியிருப்பதாக தனது கிரந்த சாகிபில் வெளிப்படையாக எழுதியவர் சீக்கிய மதத்தை நிறுவிய பாபரின் சமகாலத்தைய குருநானக்

அவரும் அயோத்திக்கு வந்து பாபர் மஸ்ஜித்தை பார்க்கிறார். ஆனால் எங்குமே பாபர் ராமர் கோவிலை இடித்த்தாக சொல்லவில்லை. பயந்திருப்பார் என்று கூட சொல்ல்லாம். ஆனால் பாபர் இறந்து 9 ஆண்டு கழித்துதான் இறந்தார் குருநானக். அப்போது ஹிமாயூனோ ஒரு அகதியாக திரிந்தான்.

18 ஆம் நூற்றாண்டின் சிப்பாய் கலகம் துவங்கும் வரை அங்கு சைவ மரபு தான் செல்வாக்கில் இருந்த்து. இந்து அறிஞரான ஆர்எஸ் சுக்லா தனது சச்தித்தரர் பரமாணிக் இதிகாஸ் என்ற நூலில் 16 ஆம் பக்கத்தில் பாபர் 500 பிகாசு நிலத்தை
--------------------------------------------------------------------------------------------------------------------------

பாபர் மஸ்ஜித் பிரச்சினை உருவான விதம்
=======================================================
1949ஆம்ஆண்டுடிசம்பர்23
அன்றுமுஸலிம்கள்பாபர்மசூதியில்இரவுத்தொழுகையைநிறைவேற்றிவிட்டுவீடுகளுக்குச்சென்றனர்.
மீண்டும்வைகறைத்தொழுகைக்காகபள்ளிவாசலுக்குவந்தமுஸ்லிம்களுக்குஅதிர்ச்சிகாத்திருந்தது.
.


பள்ளிவாசலுக்குள்ராமர், சீதை, இலட்சுமனர்ஆகியோரின்சிலைகள்வைக்கப்பட்டிருந்தன.
ராமர்தனதுஜென்மஸ்தானத்தில்அவதரித்துவிட்டார்என்றுஒருகும்பல்கலாட்டாவில்இறங்கியது.


வன்முறைக்கும்பல்பள்ளிவாசலுக்குள்நுழைந்துசிலைகளைவைத்ததாகபைஸாபாத்காவல்நிலையத்தில்முதல்தகவல்அறிக்கைபதிவுசெய்யப்பட்டது.
இதன்பின்னர்மத்தியிலும்,
மாநிலத்திலும்ஆட்சிபுரிந்தகாங்கிரஸ்அரசுகள்தொழுகைக்குத்தடைவிதித்ததிலிருந்துபாபர்மசூதிபிரச்சினைநாட்டில்மிகமுக்கியமானபிரச்சினையாகநீடித்துவருகிறது.


இராமர்கோயிலைஇடித்துக்கட்டப்பட்டதேபாபர்மஸ்ஜித்
என்றபுளுகுமூட்டையைசூதுவாதுஅறியாதஇந்துக்கள்மனதில்அவிழ்த்துவிட்டுஅவர்களில்பலர்அந்தப்பொய்யைநம்புகின்றநிலையும்ஏற்பட்டுள்ளது.


இராமருக்காகக்கட்டப்பட்டகோவில்ஒன்றுஅயோத்தியில்இருந்துஅதைஇடித்துவிட்டுஅந்தஇடத்தில்பாபர்மசூதிகட்டப்பட்டது
என்றசங்பரிவாரத்தின்வாதம்உண்மையாகஇருந்தால்பாபர்மசூதிக்காகஎந்தமுஸ்லிமும்போராடமாட்டார்.
.

பிறருக்குச்சொந்தமானஇடத்தைஆக்கிரமிப்புச்செய்துஅதில்பள்ளிவாசல்கட்டுவதைஇஸ்லாம்அனுமதிக்கவில்லை.

பாபர்மசூதிபற்றிசங்பரிவாரத்தினரின்வாதங்கள்முற்றிலும்பொய்யாகஇருப்பதால்தான்பாபர்மசூதிக்காகமுஸலிம்கள்போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

இராமர்என்றுஒருவர்வாழ்ந்ததற்குஎந்தஆதாரமும்இல்லைஎன்றுசட்டர்ஜி, .கே. மஜும்தார்,
நேருஉள்ளிட்டபலதலைவர்கள்கூறியுள்ளதன்அடிப்படையில்இராமர்கற்பனைப்பாத்திரம்என்றுகூறிபிரச்சினையைநாம்திசைதிருப்பமாட்டோம்.


ஏனெனில்அந்தஇடத்தில்இராமர்கோவில்இருந்ததா? அதுபாபரால்இடிக்கப்பட்டதா?
அந்தஇடத்தில்பள்ளிவாசல்கட்டப்பட்டதாஎன்பதுதான்பிரச்சினையேதவிரஇராமர்கற்பனைப்பாத்திரமாவரலாற்றுப்பாத்திரமாஎன்பதுஅல்ல.


இராமர்கற்பனைப்பாத்திரமாகவேஇருந்தாலும்அவருக்காகக்கட்டப்பட்டகோவிலைபாபர்இடித்திருந்தால்அதுதவறுஎன்பதைஎந்தமுஸலிமும்மறுக்கமாட்டார்.


அயோத்தியில்ராமர்பிறந்தாரா?

அயோத்தியில்,
அதுவும்பாபர்மசூதிகட்டப்பட்டிருந்தஇடத்தில்தான்இராமர்பிறந்தார்என்றவாதம்எந்தஅளவுக்குச்சரியானதுஎன்பதைக்காண்போம்.


இராமரைப்பற்றிஇந்துக்கள்எந்தமுடிவுஎடுப்பதாகஇருந்தாலும்சங்பரிவாரத்தினரின்கூற்றுக்களின்அடிப்படையில்எடுக்கக்கூடாது.
இந்துமதப்புராணங்களைமேற்கோள்காட்டியேமுடிவுசெய்யவேண்டும்.
அவ்வாறுஇல்லாமல்மனம்போக்கில்யாரேனும்இராமரைப்பற்றிமுடிவுசெய்தால்அதுஅவரதுமுடிவாகத்தான்இருக்குமேதவிரஇந்துமதத்தின்முடிவாகஇருக்கமுடியாது.


இராமரைப்பற்றிமுதன்முதலில்வால்மீகிஎன்பவர்சமஸ்கிருதமொழியில்இராமாயணத்தைஎழுதினார்.
இராமரைப்பற்றிஅதில்கூறப்பட்டவிஷயங்கள்தான்இராமரைப்படம்பிடித்துக்காட்டும்கண்ணாடியாகும்.



வால்மீகி இராமாயணத்தில் இராமர் பிறந்ததைப் பற்றிக் கூறும்போது, ‘அவர் திரேதா
யுகத்தில் பிறந்தார் என்று கூறப் பட்டுள்ளது.


இந்துக்களின்காலஅளவைமுறையில்யுகம்என்பதுகாலத்தைஅளக்கும்பெரியஅலகுகளில்ஒன்று.
யுகங்கள்நான்கு. அவை:


கிருதயுகம்17,28,000 (பதினேழுஇலட்சத்துஇருபத்துஎட்டாயிரம்) ஆண்டுகள்கொண்டது.

திரேதாயுகம்12,96,000 (பன்னிரெண்டுஇலட்சத்துதொண்ணூற்றுஆறாயிரம்) ஆண்டுகள்கொண்டது.
துவாபரயுகம்8,64,000 (எட்டுஇலட்சத்துஅறுபத்துநான்காயிரம்) ஆண்டுகள்கொண்டது.
கலியுகம்4,32,000 (நான்குஇலட்சத்துமுப்பத்துஇரண்டாயிரம்) ஆண்டுகள்கொண்டது)
என்பனவாகும்.

அதாவதுகிருதயுகத்தில்பாதிஅளவுகொண்டதுதிரேதாயுகம்.
திரேதாயுகத்தில்பாதிஅளவுகொண்டதுதுவாபரயுகம்.
துவாபரயுகத்தில்பாதிஅளவுகொண்டதுகலியுகம்.


இப்போதுநாம்வாழ்ந்துகொண்டிருக்கும்காலம்கலியுகம். கலியுகம்கிறிஸ்துபிறப்பதற்கு3102
வருடங்களுக்குமுன்துவங்குகிறது. இயேசுவுக்குப்பின்2008 ஆண்டுகள்ஆகின்றன.
இதன்படிகலியுகம்துவங்கி5110 ஆண்டுகள்நடக்கிறது. இந்தயுகத்தில்இராமர்பிறக்கவில்லை.


கலியுகத்துக்குமுந்தியயுகம்தூவாபரயுகம். இந்தயுகத்திலும்இராமர்பிறக்கவில்லை.
இந்தயுகத்துக்கும்முந்தியயுகம்தான்திரேதாயுகம்.
இந்தயுகத்தின்கடைசிவருடத்தில்இராமர்பிறந்திருந்தார்என்றுவைத்துக்கொண்டால்கூட8,64,000
+ 5,110 = 8,69,110
எட்டுஇலட்சத்துஅறுபத்துஒன்பதாயிரம்ஆண்டுகளுக்குமுன்புதான்இராமர்பிறந்தார்என்பதுவால்மீகிஇராமாயணத்தின்தீர்ப்பு.


இராமர்பிறந்தகாலம்பற்றிவால்மீகிஇராமாயணம்கூறுவதுபோலவேஅவர்பிறந்தஊர்பற்றிகூறும்போது,
இராமர்அயோத்திஎன்னும்பட்டணத்தில்பிறந்தார்எனக்கூறுகிறது.


அப்படியானால்எட்டுஇலட்சத்துஅறுபத்துஒன்பதாயிரம்ஆண்டுகளுக்குமுன்பேஅயோத்திப்பட்டணம்இருந்திருக்கவேண்டும்.


ஆனால்உ.பி.யில்உள்ளஅயோத்திஎப்போதுதோன்றியதுஎன்றுபலவிதமானஆய்வுகள்மேற்கொள்ளப்பட்டதில்,
மத்தியஅரசாங்கத்தின்தொல்பொருள்துறைசார்பில்அயோத்தியைஆய்வுசெய்து1976,
77ல்ஒருஅறிக்கையைச்சமர்ப்பித்தனர். அந்தஅறிக்கையின்52, 53
ஆகியபக்கங்களில்அயோத்திஎன்றஊர்உண்டானதும், அதில்மக்கள்வசிக்கத்தொடங்கியதும்கி.மு.
700ல்தான்இருக்கமுடியும்எனக்குறிப்பிடுகின்றார்.


அதாவது2708
ஆண்டுகளுக்குமுன்னர்அயோத்திஎன்றஇந்தஊர்இருந்திருக்கஎந்தமுகாந்திரமும்இல்லைஎன்றுஅவர்களின்அறிக்கைகூறுகிறது.

இதன்பின்னர், சி.பி.லால், கே.என். தீட்சித்ஆகியவரலாற்றுவல்லுனர்கள்1979,
80ல்இதைமறுஆய்வுசெய்தனர்.
தொல்பொருள்துறையினரின்மேற்கொண்டமுடிவுசரியானதேஎன்றுஅவர்கள்கண்டுபிடித்தனர்.
அயோத்தியில்எட்டுஇலட்சத்துஅறுபத்துஒன்பதாயிரம்ஆண்டுகளுக்குமுன்இராமர்பிறந்தார்என்றுவால்மீகிகூறுகிறார்.
ஆனால்ராமர்
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஜெயேந்திரர், சு.சாமி மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாயுமா? கி.வீரமணிஅறிக்கை!

ஜெயேந்திரர், சுப்பிரமணிய சாமி ஆகியோரின் பேச்சு கலவரங்களை தூண்டும் வகையில் இருப்பதால், அவர்கள் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாயுமா என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பாபர் மசூதி இடிக்கப்பட்டு, அந்த இடம் ராமன் பிறந்த இடம் என்று சொல்லப்பட்டதால், நம்பப்படுவதால் அங்கே ராமனுக்குக் கோயில் கட்டவேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு, பிரச்சினைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தம்? பாபர் மசூதி பாதுகாப்புக் குழுவுக்கா? அல்லது ராமன் கோயில் கட்ட விழையும் குழுவுக்கா? என்பதற்கான வழக்கில் கடந்த (60 ஆண்டுகளுக்குப் பின்) 30.9.2010 அன்று லக்னோவில் உள்ள அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் 3 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு தனித்தனித் தீர்ப்புகளைக் கூறிவிட்டது!


பொதுவாக இத்தீர்ப்பு ஒரு கட்டப் பஞ்சாயத்து ஆக உள்ளதே தவிர, சட்டத்தின் அடிப்படையில், சாட்சியங்களையோ, முக்கிய ஆதாரங்களையோ அலசி ஆராயாமல், நீண்ட கால மக்கள் நம்பிக்கை மத நம்பிக்கை என்ற அடிப்படையில் அமைந்துள்ளது என்று பிரபல சட்ட வல்லுநர்கள் உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்கள் ராஜீவ் தவான், பி.பி. ராவ் போன்றவர்கள் தமது வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர்!


காரணம், மூன்று பாகமாக அந்நிலத்தைப் பிரித்து மூன்றில் ஒரு பாகம் பாபர் மசூதி குழுவினருக்கு; மீதி இரண்டும் இரு இந்து அமைப்புகளிடமும் ஒப்படைக்கப்பட வேண்டும். மூன்று மாத கால அவகாசம் அப்பீல் செய்வதற்கு என்று தெரிவிக்கப் பட்டது. பாபர் மசூதி கட்டிய இடம் ராமன் பிறந்த இடம்தான் என்று மக்கள் நம்புவதால், அதனை ஏற்கவேண்டும் என்று நம்பிக்கை அடிப்படையில் தீர்ப்பைக் கூறிவிட்டனர்!


தொல்பொருள் ஆராய்ச்சித் துறையின் சர்வே கண்டுபிடிப்புகள் அடிப்படையிலோ அல்லது வரலாற்றுச் சான்றாதாரங்கள் அடிப்படையிலோ இத்தீர்ப்பு எழுதப்படாமல், வெறும் மக்கள் நம்பிக்கை அடிப்படையைக் கொண்டு எழுதப்பட்டதால், இது வருங்காலத்தில் பல வீண் வம்பு வல்லடி வழக்குகளை உண்டாக்கக் கூடிய அபாயப் போக்குக்கு வித்திட்டிருக்கிறது என்பதை நாம் முன்பு எழுதிய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தோம்.


இதே கருத்தை துணிச்சலாக அறிவு நாணயத்துடன் ரொமிலா தாப்பர் என்ற பிரபல மூத்த வரலாற்று ஆசிரியரும் மற்றும் பல்வேறு பொது அறிஞர்களும் ஓர் அருமையான கூட்டறிக்கையைத் தந்து மக்களுக்கு நல்ல விழிப்புணர்வை ஊட்டியுள்ளனர்!


இது மதச்சார்பின்மை என்ற நமது அரசியல் கட்டமைப்பின் அடிப்படையையே தகர்ப்பதாக உள்ளது தீர்ப்பு என்பதை அந்த வல்லுநர்கள், அறிஞர்கள் சுட்டிக் காட்டத் தவறவில்லை.


1949 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி இரவோடு இரவாக, பாபர் மசூதிக்குள் இராம் லல்லா என்ற சிறு குழந்தை இராமனின் 3 சிலைகளை, பாபர் மசூதி மத்திய டூம் பகுதி அடிப்பகுதியில் வைக்கப்பட்ட சட்ட விரோதச் செயல்பற்றியோ (அப்போதைய பிரதமர் நேரு இந்தச் சிலைகளை அகற்றுமாறு வலியுறுத்தி, எதிர்காலத்தில் இது அபாயத்திற்கு நாட்டைக் கொண்டு செல்லும் என்று கூறி, .பி. முதல்வர் பண்டிட் கோவிந்தவல்லப பந்த் (பார்ப்பனர் இவர்) கடிதம் எழுதியும், அவர் அகற்ற போதிய நடவடிக்கை எடுக்காததோடு, அயோத்தியா பகுதி அதிகாரி நய்யார் மூலம் அதை அகற்றினால், அது பொதுமக்கள் உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் என்று சாக்குபோக்கு கூறினார்.

இந்த அதிகாரி நய்யார் பிறகு ஜனசங்க எம்.பி. ஆனார், ஓய்வு பெற்ற பிறகு! இவர் எப்படிப்பட்ட இந்துத்துவா வெறியர் என்பதற்கு இது ஓர் ஆதாரம் போதாதா?) 1992 டிசம்பர் 6 ஆம் தேதி அம்பேத்கர் நினைவு நாளில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சட்ட விரோத குற்றத்தைப் பற்றியோ ஏதும் கூறாமல் அமைந்துவிட்டது இத்தீர்ப்புகள்.


லிபரான் ஆணையத்தின் குற்றவாளிகள் மிகப் பெரியவர்கள்; அதுபற்றி இனி என்ன ஆகப் போகிறது? செலவிட்ட மக்கள் பணம், தேடிய நீதி எல்லாம், வாதாபி ஜீரணாபி என்ற பெரு ஏப்பம்தானோ!


அந்தக் குற்றவாளிகள் எல்லாம் இப்போது மாபெரும் ஹீரோக்கள்!


சங்கரராமன் கொலைக் குற்றவாளியாகிய காஞ்சி சங்கராச்சாரியார் திடீரென மத்தியஸ்தம் செய்ய அயோத்திக்குப் புறப்பட ஆயத்தமாகிவிட்டதுபோல, இரு சாராரும் சமரசம் செய்துகொள்வதுபற்றி இதோபதேசம் கூறுகிறார்!


இவர் முன்பு போய் மூக்கறுபட்டு திரும்பியதை மக்கள் மறந்திருப்பார்கள் என்ற நினைப்பு அவருக்கு! (மக்கள் மறதிதானே பலருக்கு மூலதனம்?).


அவரை நோக்கி செய்தியாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்து, பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது என்று நிரூபித்து விட்டார் நீதிமன்றம் முன்பு கொலைக் குற்றம் சுமத்தப்பட்டவரான லோக குரு!


இந்த வழக்கில், முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்ட மூன்றில் ஒரு பகுதி நிலத்தில் மசூதி கட்ட அனுமதிப் பீர்களா என்பது பத்திரிகையாளர்களின் கேள்வி.


அதை முஸ்லிம்களே விரும்பமாட்டாளே அவாளுக்குத்தான் அயோத்தியில் 7 மசூதிகள் உள்ளனவே அதனால் இன்னொரு மசூதியைக் கட்ட அவாள் விரும்பமாட்டா!


மேலும் அவர், முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்கு என்று இன்னொரு மசூதி தேவையில்லை. அவர்கள் எந்த இடத்தில் இருந்தும் மெக்காவை நோக்கி தொழுகை நடத்த முடியும்! என்று கூறியுள்ளார்.


என்னே தந்திரம், சூழ்ச்சி! ராமனுக்கு ஏற்கெனவே அயோத்தியில் 700 கோயில்கள் உள்ளன என்று பிரபல வீக் வார ஏடு ஒரு சிறப்புக் கட்டுரையே முன்பு வெளியிட்டுள்ளதே!


மேலும் ராமன் இருக்குமிடம் எல்லாம் அயோத்தி என்பதுதானே பழமொழி. அப்புறம் புதிதாக ராமனுக்கு சர்ச்சைக்கு இடையில் ஏன் புதிய கோயில்? சகிப்புத் தன்மைக்கே(?) பேர் போன இந்து மதவாத தத்துவகர்த்தா சங்கராச்சாரியார் ஏன் இப்படி இரட்டை நாக்குடன் பேசுகிறார்?


பேச்சுவார்த்தை என்ற சாக்குக்காட்டி 1949 செயலை நாட்டி நாட்டில் மீண்டும் கலவரத்தைத் தூண்டிட தூபம் போடப்படுகிறதோ என்ற அய்யம்தான், அமைதி விரும்பு வோர், நடுநிலையாளர்கள் உள்ளத்தில் எழக்கூடும்.


சமாதானப் பேச்சு நடைபெறுகிறது என்ற தலைப்புப் போடும் ஏடுகளில் குறிப்பாக ஆங்கில நாளேடுகளில் ராமஜென்ம பூமியின் சார்பாக கோயில் கட்டத் துடிக்கும் நிருத்திய கோபால்தாஸ் (இப்போது இவர்தான் இராமச்சந்திர தாசுக்குப் பிறகு ராமஜென்ம பூமி நியாஸ் தலைவர்) கூறுகிறார், ராம் லல்லா ஏக் பட்டா தீன் ஹிஸ்ஸே மெயின் கைசே ரீஷென்ஞ் கடவுள் ராமர் எப்படி மூன்றில் ஒரு பாக நிலத்தில் வசிக்க முடியும்? அடடா என்ன அறிவுள்ள கேள்வி!


கல்யாண்சிங் (.பி. முதல்வராக இருந்தபோதுதான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அதன் குற்றவாளிகளில் ஒருவர் இவரும்!) பிரதமருக்குக் கடிதம் எழுதி 67 ஏக்கர் நிலத்தையும் ராமன் கோயில் கட்டுவதற்குக் கொடுத்துவிடவேண்டும் என்று கோரியுள்ளார்!


இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டில் குருமூர்த்தி அய்யர் எழுதுகிறார்:


மூன்றில் ஒரு பங்குகூட எப்படி பாபர் மசூதி குழுவினருக்குக் கொடுப்பது அது அநியாயம் அல்லவா என்கிறார்!


இப்படி உள்ளவர்கள் சமாதானப் பேச்சு என்றால், அது சிங்கள இராஜபக்சே செய்த சமாதானப் பேச்சுபோல ஆகிவிடாதா?


வழக்கு உச்சநீதிமன்றத்திற்குச் செல்வது பிரச்சினைக்குச் சட்டத் தீர்வு காணப்படவேண்டும் என்ற அவாவுடன் இருப்பினும், 25 ஆவது அரசியல் சட்ட விதிக்கே தவறான வியாக்கியானம் தந்த அலகாபாத் தீர்ப்பின் அபாயமாவது குறைய வழி ஏற்படக்கூடும். சட்டப்படி தீர்க்கவேண்டிய வழக்கை, வெறும் நம்பிக்கை அடிப்படையில் வைத்து, அது மேலும் பல புதிய கலவரப் பூமிகளை உருவாக்க வழிவகை செய்வதை முதலில் தடை ஆணை வழங்கியாவது அப்பீல் நடப்பது அவசியமாகும்!

இன்றைய எக்ஸ்பிரஸ் நாளேட்டில் சுப்பிரமணிய சுவாமி எழுதியுள்ளார் பச்சைப் பார்ப்பன சூழ்ச்சியாளர்கள் பகிரங்கமாகக் கிளம்பிவிட்டார்கள்!


அடுத்து மதுரா, கிருஷ்ணன் அவதரித்த பூமி, காசி வாரணாசி ஆகியவைகளில் உள்ள மசூதிகளையும் அகற்றவேண்டும் என்ற பழைய ஓய்ந்த குரலுக்குப் புது வலிமை வந்து விட்டதாகக் காட்டுகின்றனவே.


இவர்களைவிட நாட்டில் வேறு பயங்கரவாதிகள், கலவரம் தூண்டுவோர் வேறு எவர் உளர்?


ஏற்கெனவே 1993 இல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு விரோதமாக இப்பேச்சு உள்ளதால், உள்துறை இத்தகையவர்கள்மீது தேசியப் பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டாமா? அமைதி காக்க இது அவசியம் அவசரம்!


அலகாபாத் தீர்ப்பு கட்டப் பஞ்சாயத்து ஆக இருந்தபோதிலும், நாட்டில் அமைதி தவழுவதற்கு ஒரு மூல காரணம், இந்த 2010 என்பது 1992 அல்ல என்பதுதான்; அதாவது மக்களின் பெரும்பகுதியினர் அவர்கள் எம்மதத்தினராயினும் சரி மதவெறிக்கு முன்னுரிமை தராமல், மனிதநேயத்திற்கும், சகோதரத்துவத்திற்குமே முதலிடம் தந்து, மனிதத்தை நிலை நிறுத்தும் உயர் பக்குவத்தை நோக்கி முன்னேறுகின்றனர் என்பதன் காரணமாகவே ஆகும்!


இனிமேல் எவரும் மதவெறியைத் தூண்டி, அரசியல் லாபம் பெற்று ஆட்சிகளைப் பிடிக்க நினைத்தால் அது முடியாத காரியம்; மனிதனுக்கு முதுகில் மூன்றாவது கை முளைப்பது போன்ற முடியாத செயலாகும். இவ்வாறு கி.வீரமணி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

-நன்றி:நக்கீரன்
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------





அம்மன் கோயில் கட்டி வழிபடும் முஸ்லிம் தம்பதிகள் - பாராட்டும் பத்திரிக்கை! அம்மன் சன்னதி. பூவும் பொட்டுமாய் ஜொலிக்கிறது அம்மன் முகம். தீப ஆராதனை ந

அம்மன் சன்னதி. பூவும் பொட்டுமாய் ஜொலிக்கிறது அம்மன் முகம். தீப ஆராதனை நடக்கிறது. சூடம் ஏற்றுகிறார். இதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா? அத்தனை சடங்குகளையும் செய்பவர் ஒரு முஸ்லிம் பெண். பெயர் பஷீரா. அம்மனுக்காக தன் சொந்த செலவில் கோயில் கட்டியவர்.



கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே இருக்கும் கிள்ளை என்கிற கிராமத்தில் இருக்கிறது `ஸ்ரீ மகா மாரியம்மன்' கோயில். வேப்ப மரம், சூலாயுதம், சுற்றிலும் சிறுசிறு தெய்வங்களின் சிலைகள்... என கோயில் படுஅமர்க்களம்.



`உருவ வழிபாடு கூடாது என்பதுதான் இஸ்லாம் மதத்தின் அடிப்படை. ஆனால் முஸ்லிம் பெண்ணான நீங்கள் கோயில் கட்டி பூஜை நடத்துகிறீர்கள். ஏன்? எப்படி?'

``பத்து வருஷத்துக்கு முன்னால என் கனவில் மாரியம்மன் வந்து எனக்குக் கோயில் கட்டணும்னு சொல்லிச்சு. ஆரம்பத்துல கருங்கல் லால் ஆன அம்மன் சிலை மட்டும்தான் வச்சிருந்தேன். அதுக்குப் பின்னாலதான் வெண்கலத்தால் ஆன அம்மன் சிலை வச்சேன்.

கோயில் இருக்கிற இந்த இடம் `பூராசாமி மானியம்'ங்கிற இந்து அறக்கட்டளைக்குச் சொந்தமானது. நான் கோயில் கட்டறதைப் பார்த்துட்டு அவங்களே இந்த இடத்தை எனக்குக் கொடுத்துட்டாங்க'' என்று இயல் பாகச் சொல்லும் பஷீரா, முஸ்லிம் பெண்கள் அணியும் கறுப்பு நிற பர்தாவோடுதான்(!) கோயிலுக்குள் போய் வருகிறார்.

பூஜை செய்கிறீர்கள் சரி. மந்திரங்கள் சொல்வதுண்டா?

``எனக்குப் பெரிய அளவில் மந்திரங்கள் தெரியாது. ஆனால் நான் கோயில் கட்டியிருப்பதைக் கேள்விப்பட்டு பக்கத்து ஊர் குருக்கள் ஒருவர் எனக்குப் பூஜை செய்வதற்குரிய மந்திரங்களைச் சொல்லிக் கொடுத்தார்.

தினமும் காலை, மாலை பூஜைகள் செய்வேன். அப்போது அக்கம்பக்கத்து ஆண்கள், பெண்கள் எல்லோரும் வருவாங்க'' என்று சொல்லும் பஷீராவின் வீடு இருக்கும் தெரு முழுவதும் இந்துக்கள் மட்டும்தான். முஸ்லிம்களே இல்லை. ஓலை வேய்ந்த வீடு. ஏழ்மையான குடும்பம். கணவர் ஜின்னா அதே கிராமத்தில் பரோட்டா கடை நடத்தி வருகிறார்.

பஷீராவின் அபரிமிதமான அம்மன் வழிபாடு அவருக்குப் பெரும் சிக்கலைக் கொடுத்திருக்கிறது. முதல் மகனுக்கு பெண் பார்க்கப் போன போது பஷீரா அம்மன் கோயில் கட்டியிருப்பது தெரிந்து பெண் கொடுக்க மறுத்திருக்கிறார்கள். இரண்டாவது மகனுக்கு பெண் தேடும் போதும் அதே சிக்கல். நெருங்கிய சொந்தங்கள் கோபமாக இருப்பதும், கொடுக்கல் வாங்கல் இல்லாததும் பஷீராவின் குடும்பத்தை ரொம்பவும் மனம் நோக வைத்திருப்பது பேச்சில் எதிரொலிக்கிறது.

இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடமிருந்தும் பஷீராவுக்கு அவ்வப்போது மிரட்டல்கள் வருவதுண்டாம். அதைப் பற்றிக் கேட்டால், `` நான் பிறப்பால் முஸ்லிம்தான். ஆனால் அம்மன் மீது எனக்குப் பற்றுண்டு. உயிரைப் பற்றி எனக்குக் கவலையில்லை!'' என சற்றே உணர்ச்சிவசப்பட்டவராகப் பேசும் பஷீரா, அம்மன் படத்தை தனது வலக்கையில் `பச்சை' குத்தி `அக்மார்க்' அம்மன் பக்தையாகவே மாறியிருக்கிறார். மனைவி கோயில் கட்டி வழிபாடு நடத்துவது பற்றி கணவர் ஜின்னா என்ன சொல்கிறார்? ``கோயில் கட்டியதிலிருந்து இன்றுவரை அவர் செய்கிற எந்த வேலைக்கும் நான் குறுக்கே நிற்பதில்லை'' என்கிறார்.



இந்தக் கோயில் பற்றி கிள்ளை பேரூராட்சித் தலைவர் ரவிச்சந்திரன், ``மதநல்லிணக்கத்திற்கு இந்த அம்மன் கோயில் ஒரு உதாரணம். இதுவரை எந்தப் பிரச்னையும் வந்ததில்லை. சொல்லப் போனால், பேரூராட்சி மூலம் கோயில் வளர்ச்சிக்கு முடிந்தவரை உதவி செய்கிறோம்!'' என்கிறார்.

``முஸ்லிம் பெண் கோயில் கட்டி கும்பிடுவதில் எந்தத் தவறும் இல்லை. கடவுளின் அருளைப் பெறுவதில் இதுதான் வழிபாட்டு முறை என்று எதையும் வரையறுக்க முடியாது!'' `கோரஸாகச் சொல்கிறார்கள். கிள்ளையைச் சேர்ந்த முகமது உசேனும், பாஸ்கரும்.

கோயிலுக்கு அவ்வப்போது மிரட்டல்கள் வருவதைப்பற்றி அலட்டிக்கொள்ளாமல் கும்பாபி ஷேகத்திற்கு நாள் குறித்திருக்கிறார் பஷீரா!

(நன்றி: குமுதம்)

அன்பின் சகோதர சகோதரிகளே... இது குறித்து நாளை மறுமையில் நாம் விசாரிக்கப்படுவோம். நம் அழைப்புப்பணியின் குறிக்கோள் எதை நோக்குகின்றது?






அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி பகுதியில் அமைந்துள்ள இடம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில் 30.09.2010 அன்று அலகபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்ச் தீர்ப்பு வழங்கியது.

அயோத்தி நிலம் மூன்று தரப்பினருக்கு சொந்தம் என்றும், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 3 மாதகால அவகாசம் உள்ளது என்றும் அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் சர்ச்சைக்குரிய நிலம் 2.5 ஏக்கரை மூன்றாக பிரிக்கப்படும் வரை தற்போதைய நிலை தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மூன்றில் ஒரு பங்கு நிலம் பாபர் மசூதி கமிட்டியிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். மற்றொரு பகுதி நிர்மோகி அகாரா அமைப்புக்கு தர வேண்டும். எஞ்சிய இன்னொரு பகுதி புதிதாக அமைக்கப்படும் அறக்கட்டளைக்கு தரப்பட வேண்டும்.

நிலத்திற்கு உரிமை கோரிய சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மனுக்கள் நிராகரிக்கப்பட்டன என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

டெல்லி காமன்வெல்த் விளையாட்டு குளறுபடிகளை விளக்கும்



கார்ட்டூன்



.

புதுடெல்லி,செப்.30:45 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் எல்லா இந்தியர்களின் முக்கிய விபரங்களை அடக்கி தயாராகிக் கொண்டிருக்கும் பல்நோக்கு தேசிய அடையாள அட்டை(multi-purpose national ID) ஆபத்தானதும், பொருளற்றதும், தவறாக பயன்படுத்தும் வாய்ப்பை உருவாக்குவதுமாகும் என வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் உள்ளிட்டவர்கள் வெளியிட்ட அறிக்கையில் இத்திட்டத்தை உடனடியாக நிறுத்தவேண்டுமென கோரியுள்ளனர்.

அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளால் ஏற்கனவே கைவிடப்பட்ட இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் இந்தியா இவ்வளவு அவசரம் காண்பிப்பது ஏன் என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த அறிக்கையை பல்வேறு துறைகளைச் சார்ந்த 17 பிரபல பிரமுகர்கள் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ளனர்.

தேசத்தின் குடிமக்களின் அந்தரங்க விஷயங்களில் அத்துமீறுவதும், அதன்மூலம் அவர்களின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் இத்தகைய விபரங்களை சேகரிப்பதற்கு முன்பு பாராளுமன்ற அனுமதியை பெறவோ, பொதுமக்களிடத்தில் விவாதிக்கவோ செய்யவில்லை.

பொதுவிநியோக முறை, தேசிய தொழில் உறுதி திட்டம் உள்ளிட்டவைகளின் சுமூகமான செயல்பாட்டிற்கு இத்திட்டம் உதவும் என மத்திய அரசு கூறினாலும், அது எவ்வாறு என விவரிக்கவில்லை. விபரங்களை கையாளுவது யார்? அவை தவறான நபர்களிடம் சென்று அடையாமலிருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியவைக் குறித்து பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தேசிய அடையாள அட்டை அதாரிட்டி மசோதா தெளிவாக்கவில்லை.

குடிமக்களின் அந்தரங்க விஷயங்களில் அத்துமீறுகிறது, அதிக செலவை ஏற்படுத்துகிறது என்ற காரணங்களால் வெளிநாடுகள் இத்திட்டத்தை நிராகரித்துவிட்டன.

30 கோடியே 80 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட அமெரிக்காவும், ஆறுகோடியே 10 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட இங்கிலாந்தும், இரண்டு கோடியே 10 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட ஆஸ்திரேலியாவும் நிராகரித்த திட்டத்தைத்தான் 100 கோடி மக்கள் தொகையைக் கொண்ட இந்தியா செயல்படுத்தப் போகிறது என பிரமுகர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

அடையாள அட்டையைக் குறித்து பொதுமக்கள் எழுப்பும் சந்தேகங்களை கவனத்தில் கொண்டு திட்டத்தை உடனடியாக நிறுத்திவைக்க வேண்டும். இதன் அரசியல் சட்ட அந்தஸ்து குறித்து ஆய்வுச்செய்ய வல்லுநர்களைக் கொண்ட கமிட்டியை நியமிக்க வேண்டும். இவ்வாறு 17 பிரமுகர்கள் கையெழுத்திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இவ்வறிக்கையில் வி.ஆர்.கிருஷ்ணய்யர், வரலாற்று ஆய்வாளர் ரொமீலா தாப்பர், வழக்கறிஞர் கண்ணபிரான், நீதிபதி ஏ.பி.ஷா, சமூக சேவகர் கவிதா ஸ்ரீவஸ்தவா, ஷப்னம் ஹாஷ்மி, அருணா ராய் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

மகிழ்ச்சியான செய்தி!!!!

புதிய மதுரை விமானநிலயம்.
மதுரை பன்னாட்டு விமானநிலைய புதிய டெர்மினல் சில நாட்கள் முன் திறக்கப்பட்டது பெரிய ரக விமானம் மற்றும் சரக்கு விமான போக்குவரத்திற்கான வசதி செய்யபட்டு விட்டது.
விரைவில் துபாயில் இருந்து மதுரைக்கு
ஃபிலைதுபை விமானம்தன் சேவையை தொடங்க உள்ளது
இதனால், வெளிநாட்டு விமான போக்குவக்கு தயார் நிலையில் உள்ளது இன்ஷா அல்லா விரைவில் துபாயில் இருந்து FLYDUBAI விமானம் செல்ல உள்ளது நமது ஊரில் இருந்து மதுரை விமானநிலயம் 210கி.மீ தூரம் சென்னைவிட 100.கி.மீ குறைவு அவசரத்துக்கு இதை நாம் பயன் படுத்தலாம்.



மதுரை விமான நிலையத்திற்கு புதுத் தெம்பு கிடைத்துள்ளது. மதுரையிலிருந்து டெல்லி, மும்பைக்கு விமானங்களை இயக்க ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் எடுத்துள்ளது.

இன்று 27.09.2010 முதல் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் மதுரையிலிருந்து சென்னை வழியாக தினசரி டெல்லி, மும்பைக்கு விமானங்களை இயக்கத் தொடங்கியுள்ளது.



மதுரை விமானநிலய வாகனம் நிருத்தும் இடம்

முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...