இஸ்லாமிய பெண்கள் அணியும் புர்காவுக்குத் தடை விதிக்க சிவசேனா கோரிக்கை!

"புர்கா அணிந்து கொண்டு சிலர் குற்ற செயல்களில் ஈடுபடுவதால் புர்கா அணிய அரசு தடை விதிக்க வேண்டும்" என்று சிவசேனா கட்சி புதிய முழக்கத்தை எழுப்பியுள்ளது.

இது குறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் வெளியாகியுள்ள ஒரு கட்டுரையில் ''சாந்தா குரூசில் உள்ள ஒரு மருத்துவமனையில் அக்டோபர் 15 அன்று இரண்டு மாத குழந்தை ஒன்று கடத்தப் பட்டதாகவும் ரகசிய கேமராவில் பதிவான காட்சியில் அதைக் கடத்தியவர் புர்கா அணிந்து இருந்ததாகவும் எனவே இது போன்ற குற்ற செயல்களைத் தடுக்க புர்கா அணிவதைத் தடை செய்ய வேண்டும்" என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

- கருத்துக்கள்
தவறான செயல்களில் ஈடுபடுவோர் சில சூழ்நிலைகளில் இது போன்று புர்கா அணிந்து கொண்டு தவறு செய்வதை கண்டிக்க வேண்டிய நிலையில் ஒரு மத நம்பிக்கையை தகர்க்கும் வகையில் கருத்து கூறும் சிவசேனா, காவி உடை அணிந்து கொண்டு காம களியாட்டங்களில் சிலர் ஈடுபடுவதால் காவி உடைக்கு தடை கோருமா?
ஏன்டா வீணாபோனவனே, காவி டிரெஸ்ஸ போட்டுகிட்டு சங்கராசாரி, பிரேமாநந்தா, நித்தியானந்தான்னு நீங்க அடிக்கிர கூத்துக்கு மொதல்ல அததான்டா தடைபண்ணனும்
//காவி உடை அணிந்து கொண்டு காம களியாட்டங்களில் சிலர் ஈடுபடுவதால் காவி உடைக்கு தடை கோருமா? //

ஆமா.. காவி உடையையும் தடை செய்ய சிவசேனா போராட்டம் நடத்தனும்.. அப்ப இந்த ஆளு எந்த கலர் டிரஸ் போடுவார்?

முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...