குலசேகரம்: குமரி அருகே திருவட்டாரில் அரசு பள்ளியில் பயின்றtamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperமாணவர்களுக்கு தனியார் பள்ளியில் அட்மிஷன் மறுக்கப்பட்டதால் மாணவர்கள், பெற்றோர்கள் பள்ளி முன் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். குமரி மாவட்டம் திருவட்டார் அருகே கேசவபுரத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 8ம் வகுப்பு தேறிய வர்கள் திருவட்டார் அருகே புத்தன்கடையில் உள்ள தனியார் பள்ளியிலோ அல்லது குலசேகரம் பள்ளியிலோ தான் மேற்படிப்பு படிக்க செல்லவேண்டும்.கேசவபுரம் பள்ளியில் இந்த ஆண்டு 8ம் வகுப்பு தேறியவர்களில் 11 பேர் புத்தன்கடை தனியார் பள்ளியில் 9ம் வகுப்பில் சேர விண்ணப்பித்திருந்தனர்.

அவர்களை நேற்று முன்தினம் வருமாறு பள்ளி சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.அங்கு சென்ற மாணவர்கள், பெற்றோர்களிடம் தலைமை ஆசிரியர் பள்ளியில் இடம் இல்லை என கூறி அட்மிஷன் தர மறுத்துள்ளார். ஆத்திரம் அடைந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர் பள்ளிமுன் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அப்போது அந்த வழியாக சென்ற ஹெலன்டேவிட்சன் எம¢பி தலைமை ஆசிரியர் மற்றும் கல்வி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். நிர்வாகத்திடம் பேசி இம்மாதம் இறுதியில் முடிவை அறிவிப்பதாக தலைமை ஆசிரியர் தெரிவித்தார். பெற்றோர் போராட்டத்தை கைவிட்டனர்

முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...