பாங்கைச் செவியுற்றவர் மீது பள்ளிக்கு வருவது கடமை என்பது பற்றிய பாடம்.


 
கண் பார்வையற்ற ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நிச்சயமாக என்னை பள்ளிக்கு அழைத்து வரும் உதவியாளர் யாரும் எனக்கில்லை (எனக் கூறி) தனக்கு வீட்டில் தொழுது கொள்ள அனுமதி வழங்குமாறு கேட்கிறார். அதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள், அவருக்கு அனுமதியும் வழங்கிவிட்டனர். அனுமதி பெற்று அவர் திரும்பியபோது அவரை அழைத்து தொழுகையின் அழைப்பை (பாங்கை) செவியுறுகிறீரா? என்று கேட்டனர். அதற்கவர் ஆம்! என்றார். (அதற்கு) பதில் கூறுவீராக! (பள்ளியில் வந்து தொழுவீராக!) என்று கூறினர்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹ் அன்ஹு. 

முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...