பிரம்மாண்ட புத்தக கப்பல் தூத்துக்குடி வருகிறது!!


APRIL 24, லோகோஸ் கோப்' என்ற பிரம்மாண்ட புத்தக கப்பல், மே 12ம் தேதி தூத்துக்குடி வ.உ.சி., துறைமுகம் வருகிறது.
ஜெர்மனியில் 1973ல் கட்டப்பட்ட இந்த கப்பலின் வடிவமைப்பில், பின்னர் மாற்றம் செய்யப்பட்டது. 32.50 மீட்டர் நீளம் கொண்ட இந்த கப்பலில் 45 நாடுகளைச் சேர்ந்த 400 மாலுமிகள் பணிபுரிகின்றனர்.

பொழுதுபோக்கு,விளையாட்டு, அறிவியல், கலை, ஆன்மீகம், பொதுஅறிவு உள்ளிட்ட 5,000 தலைப்புகளில் 5 லட்சம் புத்தகங்களைக் கொண்ட இந்த கப்பல் மே 12ம் தேதி தூத்துக்குடி வ.உ.சி., துறைமுகம் வருகிறது.

மே 23ம்தேதிவரை இக்கப்பலை துறைமுகத்தில் பொதுமக்கள் பார்வையிடலாம். இதற்கு கட்டணமாக நபருக்கு 50 ரூபாய் வசூலிக்கப்படும். 12 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியருக்கு கட்டணம் கிடையாது.

முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...