கூட்டணி ஆட்சியும் அமையலாம் - கருணாநிதி பரபரப்பு பேட்டி!?

தமிழகத்தில் தி.மு.க. தனியாகவும் ஆட்சி அமைக்கலாம்; கூட்டணி ஆட்சியையும் அமைக்கலாம் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.சென்னை சாரதா பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் முதல்வர் கருணாநிதி, அவரது மனைவி தயாளு அம்மாள், முதல்வரின் அக்காளும், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் தாயாருமான சண்முகசுந்தரத்தம்மாள் ஆகியோர் புதன்கிழமை காலை வாக்களித்தனர். 


அவர்கள் வசிக்கும் தெருவிலேயே வாக்குச் சாவடி அமைந்திருந்தது.காலை 9.45 மணிக்கு வாக்குச் சாவடியை அடைந்த அவர்கள் தங்களது வாக்குகளைச் செலுத்தினர். பின்னர், வெளியே கூடியிருந்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு கருணாநிதி அளித்த பதில்:

தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?
வெற்றி வாய்ப்பு உதயசூரியனைப் போன்று பிரகாசமாக இருக்கிறது.

எவ்வளவு தொகுதிகளில் வெற்றி பெறுவீர்கள்?
ஆட்சி அமைக்கின்ற அளவுக்கு வெற்றி பெறுவோம்.

தனியாக ஆட்சி அமைப்பீர்களா? கூட்டணி ஆட்சியா?
தனியாகவும் வரலாம்; கூட்டணி ஆட்சியாகவும் இருக்கலாம்.

தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடந்து கொண்டது என்ற குற்றச்சாட்டைப் பற்றி உங்கள் கருத்து?
எங்களைப் பொறுத்தவரையில் தேர்தல் ஆணையம் கடுமையாக நடந்து கொண்டதே தவிர, பாரபட்சமாக நடந்து கொண்டதாகச் சொல்ல மாட்டேன். ஒன்றிரண்டு இடங்களில் தேர்தல் ஆணையத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அதைப் பற்றிச் சொன்னால் அதில் தவறில்லை என்பது எனது கருத்து.

முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...