புழல் சிறையில் இன்று ப்ளஸ் 2 தேர்வு எழுதும் கைதிகள்


தமிழகம் புதுவையில் இன்று தொடங்கவுள்ள ப்ளஸ் 2 தேர்வில் பங்கேற்க தமிழக சிறைகளில் உள்ள ஆண், பெண் தண்டனை கைதிகளில் பலரும், சிறைத்துறை உதவியுடன் படித்து வருகின்றனர்.


புழல், வேலூர் மத்திய சிறைகள் மற்றும் புதுச்சேரி சீர்த்திருத்தப்பள்ளி ஆகியவற்றில் தண்டனை பெற்ற 19 பேரும், புழல் சிறையில் காவல் பணியில் ஈடுபட்டுள்ள ஏழு வார்டன்கள் உட்பட மொத்தம் 26 பேர், இன்று துவங்கும் பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதுகின்றனர். தேர்வு துவங்கியதும் மாவட்ட கல்வி அலுவலர்கள், நேரில் கண்காணிப்பு மேற்கொள்வர்.

அவர்களுக்கான சிறப்பு தேர்வு மையம் புழல் சிறை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கல்வித்துறை மற்றும் சிறைத் துறையினரின் தீவிர கண்காணிப்பில் தேர்வு நடக்கிறது.

முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...