தேமுதிக, அதிமுக கூட்டணியில் நிலைக்குமா, நீடிக்குமா என்பது இன்னும் ஒரு கேள்விக்குறியே!!!



தேமுதிக, அதிமுக கூட்டணியில் நிலைக்குமா, நீடிக்குமா என்பது இன்னும் ஒரு கேள்விக்குறியே!!
விஜயகாந்த்துக்கு அதிமுக கூட்டணியில் சேர்ந்ததில் முழு திருப்தியும், மகிழ்ச்சியும் இல்லையாம். கூட இருந்தவர்கள் தொடர்ந்து தொணத்தி தொணத்தி வந்ததால்தான் கூட்டணிக்கே அவர் சம்மதித்தாராம். வேட்பாளர் நேர்காணலின்போதும் கூட இதைத்தான் அவர் சொன்னாராம். எல்லோரும் சொன்னீங்கன்னு சேர்ந்துட்டேன். இருந்தாலும், என்னால் 41 பேருக்கு மட்டும்தான் வாய்ப்பளிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதை நான் விரும்பவில்லை என்று கூறினாராம் விஜயகாந்த்.


இதை வைத்து புதிய செய்தி பரவி வருகிறது. அது, தான் விரும்பியபடி, சாதகமான தொகுதிகளை அதிமுக தரத் தயங்கினால், அடுத்த விநாடியே கூட்டணியிலிருந்து விலகி விடுவது என்ற முடிவில் விஜயகாந்த் இருக்கிறார் என்பதுதான்.

எந்தவித எதிர்ப்பும் காட்டாத வை.கோவிற்கு நேர்ந்த நிலமை அவரை வேறவிதமாக சிந்திக்க செய்கிறது என்றும். அவருக்கே இந்த நிலைமை என்றால் அம்மாவை பாடுபடுத்தி ஏக்கமாக நீண்ட நாட்கள் உட்கார வைத்த நமக்கு தேர்தல் பின் நடக்கும் காட்சிகள் அவருக்கு சினிமாவில் வரும் காட்சிகள் போல மனக்கண்ணில் ஒடிக் கொண்டிருபதாகவும் செய்திகள் கசிகின்றன

இப்படி உண்மையிலேயே விஜயகாந்த் நினைக்கிறாரா அல்லது எதிர்த் தரப்பிலிருந்து கிளப்பி விடப்படும் வதந்தியா என்பது தெரியவில்லை.

அரசியலாச்சே, என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்!



நாம் வேடிக்கை பார்க்கும் நேரம் இது.

முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...