திருவாரூர் எனது 'கனி'த் தொகுதி: கருணாநிதி நெகிழ்ச்சி


திருவாரூர் எனது 'கனி'த் தொகுதி ஆகிவிட்டது என்று நெகிழ்வுடன் கூறினார், முதல்வர் கருணாநிதி.
திமுக தலைவர் கருணாநிதி இம்முறை திருவாரூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அவரிடம் திருவாரூரில் போட்டியிட என்ன காரணம்? என்றதற்கு, "நான் முதன் முதலில் குளித்தலையில் போட்டியிடுவதற்குப் பதிலாக திருவாரூரில் என் சொந்த ஊரில் தான் போட்டியிட்டிருக்க வேண்டும். ஏனென்றால் அது என்னுடைய சொந்த ஊர். அப்படிப் போட்டியிட முடியாமல் அந்த தொகுதி அப்போது தனித் தொகுதியாக ஆக்கப்பட்டுவிட்டது, அதாவது அப்போதிருந்த அரசியல்வாதிகளால் - நான் அங்கே நின்றுவிடக் கூடாது என்பதற்காக - அது தனித் தொகுதியாக ஆக்கப்பட்டுவிட்டது.
இப்போது அது தனித் தொகுதியிலிருந்து விடுபட்டு - பொதுத் தொகுதியாக - நான் அங்கே நிற்கலாம் என்ற அளவிற்கு அது எனக்கு 'கனி'த் தொகுதியாக ஆகிவிட்டது," என்றார்.


முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...