Fwd: வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்பவர்கள் கவனத்துக்கு..!



முக்கியக் குறிப்புகள்:

* எஸ்.எஸ்.எல்.சி முடித்தவர்களில் முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் 30 வயது வரை, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் 32 வயது வரை, எஸ்.சி மற்றும் எஸ்.டி வகுப்பைச் சேர்ந்தவர்கள் 35 வயது வரையில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, வேலை வாய்ப்பினை பெற முடியும். இதற்கு மேல் படித்தவர்கள், 57 வயது வரையிலும் பதிவு செய்து வேலை வாய்ப்பினை பெறலாம்.

* பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள், அதற்குக் குறைவாக படித்தவர்கள் பள்ளி மாற்றுச் சான்றிதழ் மற்றும் குடும்ப அட்டையை வைத்து பதிவு செய்துகொள்ளலாம். ஓட்டுநர் பணி போன்ற பணிவாய்ப்புகளை இதன் மூலம் பெற முடியும்.

* பள்ளிப் படிப்பு படிக்காதவர்கள்... பிறப்பு சான்றிதழ் மற்றும் குடும்ப அட்டை ஆகிய இரண்டையும் வைத்து பதிவு செய்யலாம். இவர்களுக்கு துப்புரவு பணி போன்ற வாய்ப்புகள் கிடைக்கும்.

* மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பதிவைப் புதுப்பிக்க வேண்டும். அதன்படி ஜனவரி மாதம் ஒருவர் புதுப்பிக்க வேண்டும் என்றால், அவர் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய மூன்று மாதங்கள் வரை புதுப்பித்துக் கொள்ளலாம். அடுத்த 18 மாதங்கள் வரையில்கூட இவர்களுக்கு சலுகை வழங்கப்படுகிறது. அப்படியும் தவறுபவர்களுக்கு... அரசாங்க அறிவிப்பு மூலம் சலுகைகள் தரப்படுகின்றன.

* ஒரு மாவட்டத்தில் பதிவு செய்தவர், வேறு மாவட்டத்துக்கு மாற்றிக் கொள்வதற்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. உதாரணமாக, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர், சென்னை மாவட்டத்துக்கு மாற நினைத்தால்... அவர் சென்னைக்கு குடிபெயர்ந்ததற்கு அத்தாட்சியாக சென்னை வட்டாட்சியரிடமிருந்து பெற்ற குடும்ப குடிபெயர்ச்சி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் குடும்ப அட்டை ஆகியவற்றின் நகலை, திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபாலிலோ விண்ணப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலரிடம் உறுதிபெற்று பின்னர், சென்னை வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு மாற்றிக் கொடுப்பார்கள். இப்படி ஓர் ஆண்டுக்கு ஒருமுறைதான் மாற்றமுடியும்.

* புதிதாக பதிவு செய்பவர்கள், புதுப்பிக்க நினைப்பவர்கள், கூடுதல் தகுதிகளை இணைக்க நினைப்பவர்கள் என அனைவருமே வேலைவாய்ப்பு அலுவலகத்தின் www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரி மூலமாகவேகூட பதிவு செய்யலாம். நேரில் செல்லத் தேவையில்லை. உங்களுக்கான அனைத்து வழிகாட்டல்களும் இதிலேயே கிடைக்கும். தவறான தகவல்கள் கொடுத்தால், சான்றிதழ் சரிபார்த்தலின்போது பிடிபட்டு, அதற்கான நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பதிவு செய்தபின் அந்தப் பக்கத்தை அப்படியே நகல் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

- அவள் விகடன்
 

சர்வதேசப் பார் வை - செய்தித் துளிகள்...! - கான் பாகவி

சர்வதேசப் பார்வை - செய்தித் துளிகள்...! - கான் பாகவி
இராக் போரில் இலட்சம் பேர் படுகொலை


 ராக் மீது அமெரிக்கா ஆக்கிரமிப்புப் போர்   தொடுத்திருந்த காலத்தில், சரியான காரணமின்றி ஒரு  லட்சம் இராக்கியர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்; குறிப்பாக, அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் ஆட்சிக் காலமான 2004 முதல் 2009 வரை இப்படுகொலைகள் அரங்கேறியுள்ளன என்று விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜாலியன் அசான்ஜ் தெரிவிக்கிறார்.

இந்த எண்ணிக்கையை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் விக்கிலீக்ஸிடம் உள்ளன. இவர்களில் 80 விழுக்காட்டினர் சிவிலியன்கள் என்பது குறிப்பிடத் தக்கது. பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது பேசிய அசான்ஜ், இந்த ஆவணங்களைக் கசியவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள அமெரிக்க ராணுவ வீரர் பிராட்லி மானேங்க் கடுமையான குற்றச்சாட்டுகளின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் என்றார்.

'அல்காயிதா' அமைப்புக்கு உதவியதாகவும் எதிரிக்குத் துணைபோனதாகவும் அவ்வீரர்மீது குற்றம் சாட்டியுள்ள அமெரிக்க அரசின் செயலை, சர்வதேச அமைப்புகள் வேடிக்கை பார்ப்பதாக அசான்ஜ் கண்டித்தார்.

ஒரே ஆண்டில் 26 ஆயிரம் பாலியல் குற்றங்கள்

மெரிக்க பாதுகாப்பு அமைச்சகமான பென்டகன் புதிய ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க ராணுவப் படை வீரர்கள் மத்தியில் 2012ஆம் ஆண்டில் மட்டும் 26 ஆயிரம் பாலியல் வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளனவாம்! இது, முந்தைய ஆண்டில் நடந்த குற்றங்களைவிட 37 விழுக்காடு அதிகமாகும். இதன்படி நாளொன்றுக்கு சராசரியாக 70 பாலியல் குற்றங்கள் அமெரிக்க ராணுவப் படையினரால் நடந்தேறியுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை வெளியுலகுக்குத் தெரிவதில்லை.

இவற்றை அமெரிக்க அதிபரும் பாதுகாப்பு அமைச்சரும் வன்மையாகக் கண்டித்தனர் என்று தகவல்கள் கூறுகின்றன.

துருக்கி விமானங்களில் புதிய நடைமுறைகள்



து
ருக்கி ஏர்லைன்ஸ் விமானங்களில் இஸ்லாமிய நடைமுறைகள் அமலுக்கு வருகின்றன. அதன்படி விமானப் பணிப்பெண்கள் உதட்டுச் சாயம் பூசுவதற்குத் தடை விதிக்கப்படுகிறது. மதசசார்பற்ற சக்திகள் இதைக் கடுமையாக எதிர்த்துள்ளன. பிரதமர் ரஜப் தய்யிப் உர்துகான், இஸ்லாமிய நடைமுறைகளை ஓசையின்றி கொண்டுவருகிறார் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

உஸ்மானிய டர்கி தொப்பி (டர்பூஷ்), நீளமான சீருடை அணிவது, மது வகைகளுக்குத் தடை, இறுதியாகச் சிவப்பு உதட்டுச் சாயத்திற்குத் தடை ஆகியவற்றை துருக்கி ஏர்லைன்ஸ் நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ளது. இது பாரம்பரிய உஸ்மானிய நடைமுறைக்குத் திரும்புகின்ற நல்ல தொடக்கமாகும் என்று நிறுவனம் வர்ணித்துள்ளது.

கர்ளாவி ஒரு ஜிஹாதி -
சியோனிஸ்டு ஏடு வர்ணனை



டா
க்டர் யூசுஃப் அல்கர்ளாவி அவர்கள் இன்றைய இஸ்லாமியப் பேரறிஞர்களில் ஒருவர்; சர்வதேச உலமாக்கள் ஒன்றியத்தின் தலைவர். அண்மையில் பாலஸ்தீனத்தின் ஃகஸ்ஸா பகுதிக்கு கர்ளாவி 60 உலமாக்களுடன் வருகை புரிந்தார். இதை, சியோனிஸ்டு எபிரேய ஏடு ஒன்று, "ஆபத்தானது; அவர் ஒரு ஜிஹாதிய ஷைகு'' என்று வர்ணித்தது.

கர்ளாவியின் மார்க்கத் தீர்ப்புகள் இஸ்ரேலுக்கு எதிரானவை; இஸ்ரேல்மீதான போரைத் தூண்டுபவை. அரபு மற்றும் இஸ்லாமிய உலகில் அவருடைய ஃபத்வாக்கள் பின்பற்றப்படுகின்றன. அவரது வருகை மார்க்க மோதல்களையும் சர்வதேச அளவில் பாதிப்பையும் உருவாக்கும் என்று அந்த ஏட்டில் யூதர் ஒருவர் எழுதியுள்ளார்.

அப்துல் மலிக் பின் மர்வான்
காலத்து பொற்காசு ஏலம்



லா
இலாஹ இல்லல்லாஹ்; வஹ்தஹு லா ஷரீக்கலஹு என்ற கலிமா அரபி மொழியில் பொறிக்கப்பட்ட முதலாவது தங்க நாணயம் ஒன்று அண்மையில் ஏலத்திற்கு வந்தது. உமய்யா கலீஃபாக்களில் ஐந்தாமவரான அப்துல் மலிக் பின் மர்வான் காலத்தில் கி.பி. 690இல் டமாஸ்கஸில் தயாரிக்கப்பட்ட அந்தப் பொற்காசு 'தீனார் 77' என்று அழைக்கப்படுகிறது.

அபூர்வமான வேலைப்பாடுகளுடன் கூடிய இப்பெற்காசு லண்டனில் மே மாதம் பகிரங்க ஏலத்திற்கு வந்தது. 20 மி.மீட்டர் விட்டம் கொண்ட இந்தச் சிறிய பொற்காசு 4.25 கிராம் எடை கொண்ட 22 காரட் தங்க நாணயமாகும். அதில், கூஃபா அரபி எழுத்து வடிவத்தில் ஒரு பக்கத்தில் 'குல் ஹுவல்லாஹு' அத்தியாயம் பொறிக்கப்பட்டுள்ளது. மறுபக்கத்தில் 'முஹம்மதுர் ரசூலுல்லாஹ்' என்று எழுதப்பட்டுள்ளது. சுற்றுப்புறத்தில் 'கலிமா' காணப்படுகிறது. ஹிஜ்ரீ 77ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டதற்கு அடையாளமாகவே 'தீனார் 77' என்று அதில் குறிப்பிடப்படுகிறது.

எகிப்தில் மது இல்லாத சுற்றுலா விடுதி



கிப்து நாட்டில் செங்கடற்கரையில் மது இல்லா முதலாவது சுற்றுலா விடுதி திறக்கப்பட்டுள்ளது. அல்ஃகர்தகா நகரில் தொடங்கப்பட்டுள்ள இவ்விடுதியில், போதைக்கு இடமில்லை. மற்றெல்லா வசதிகளும் சுற்றுலாப் பயணிகளுக்குக் கிடைக்கும்.

இந்தச் சுற்றுலா விடுதியில் 134 அறைகளும் 35 பகுதிகளும் உள்ளன. நீச்சல் குளமும் உண்டு. கடைசி மாடி பெண்களுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் பெண்களுக்கான நீச்சல் குளம், அரங்கம், பெண் காவலர்கள் போன்ற ஏற்பாடுகள் உள்ளன.

விடுதியின் திறப்பு விழா நிகழ்வுகள், மது கண்ணாடிக் கிண்ணங்கள் உடைப்பைக் கொண்டு துவங்கின.

ஸ்வீடன் நாட்டில் பாங்கொலி



ஸ்
வீடன் நாட்டில் வெடியா பள்ளிவாசலில் முதல்முறையாக பாங்கொலி வெளியே கேட்டது. சுமார் மூன்று நிமிடங்கள் நகரில் ஒலித்த தொழுகை அழைப்பு முஸ்லிம்களை பரவசப்படுத்தியது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமிற்குத் தெற்கே வெடியா நகரம் உள்ளது.

இந்தப் பள்ளிவாசலில் சுமார் ஏழாயிரம்பேர் தொழுதுவருகிறார்கள். இதுவரை சப்தமிட்டு பாங்கு சொல்வதற்குத் தடை இருந்தது. ஸ்டாக்ஹோம் காவல்துறையினர் இப்போதுதான் அனுமதி வழங்கியுள்ளனர்.

சுவீடன் நாட்டில் சுமார் 200 பள்ளிவாசல்கள் உள்ளன. அவற்றில் சில பள்ளிவாசல்களில் மட்டுமே பாங்கு மேடை உள்ளது. பெரும்பாலான பள்ளிவாசல்கள் தாற்காலிகக் கட்டடங்களிலேயே இயங்கிவருகின்றன.

பிரிட்டனில் சரிந்துவரும் கிறித்தவம்



டெ
ய்லி டெலிகிராஃப் ஏடு ஒரு செய்தி வெளியிட்டுள்ளது:

பிரிட்டனில் கிறித்தவ மதம் முன்எப்போதும் இல்லாத சரிவைச் சந்தித்துவருகிறது; அபாயகரமான அளவில் நசிந்துவருகிறது. பிரிட்டனைச் சேர்ந்த 25 வயதுக்குட்பட்ட ஒவ்வொரு பத்துப்பேரில் ஒருவர் முஸ்லிமாக உள்ளார்.

2011ஆம் ஆண்டு புதிதாக மேற்கொள்ளப்பட்ட ஒரு கணக்கெடுப்பைச் சுட்டிக்காட்டியுள்ள பிரிட்டன் ஏடு, கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்ட குடியேற்றம் கிறித்தவத்தின் சரிவுக்கு உதவியுள்ளது; அதேநேரத்தில், இஸ்லாத்தை ஏற்கும் நிகழ்வுகள் குறிப்பாக இளைஞர்களிடையே பெரிய அளவில் அதிகரித்துள்ளன என்று குறிப்பிட்டுள்ளது.

இந்தக் கணக்கெடுப்பின்படி, இங்கிலாந்து ஸ்காட்லாண்டு, வேல்ஸ் ஆகிய பகுதிகளில் மட்டும் கிறித்தவர்களின் எண்ணிக்கை 4.1 மில்லியன், அதாவது 10 விழுக்காடு குறைந்துள்ளது. ஆனால், இப்பகுதிகளில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 75 விழுக்காடு அதிகரித்துள்ளது.
(அல்முஜ்தமா)
-

உணவே மருந்து : குளிர்பானங்கள் குடிக்கலாமா ?


உணவே மருந்து :   குளிர்பானங்கள் குடிக்கலாமா ?


 

  இப்போது குளிர்பானங்கள் அருந்துவது நாகரிமாகி விட்டது. இரண்டு பேர் சந்தித்தால் அவர்கள் கையில் கண்டிப்பாக கூல்டிரிங்க்ஸ் இருக்கும். குறிப்பாக விருந்தினர்களை நன்கு மதித்ததன் அடையாளமாகப் பாட்டில் பானங்களையே வழங்குகிறார்கள். அதுவே விருந்தினருக்கும் மகிழ்ச்சியை அளிக்கிறது. மனதுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் உண்மையில் இந்தக் குளிர்பானங்கள் உடலுக்குக் கேடுதான் விளைவிக்கிறது. இந்தக் குளிர்பான வகைகள் அனைத்தும் பாட்டிலில், டின்னில் நீண்ட நாள்கள் கெட்டுப் போகாமல் பாதுகாப்பாக இருக்க பென்ஸாயிக் என்ற அமிலமே பயன்படுத்தப்படுகிறது.



  பென்ஸாயிக் என்ற இந்த அமிலம் ஆஸ்துமா, பரு, தோலில் வேனல் கட்டி, வெடிப்பு முதலியவற்றை உண்டாக்குகிறது. கூடவே எதிலும் குற்றம் கண்டுபிடிக்கும் மனப்பான்மையையும் உண்டாக்குகிறது. குளிர்பானங்களைப் பதனப்படுத்துவதுடன் எலுமிச்சைப் பானங்கள் கருப்பு நிறமாக மாறி விடாமல் இருக்கவும் சல்ஃபர் டை ஆக்சைடு சேர்க்கப்படுகிறது. இது பானங்களில் உள்ள நறுமணம் ஆவியாகிப் போய்விடாமல் பாதுகாக்கிறது. இந்த சல்ஃபர் டை ஆக்சைடு ஒரு நச்சு முறிவு மருந்து தான். நலமாக உள்ள ஒருவர் தொடர்ந்து குளிர்பானம் அருந்தினால் மந்தநிலை, தெளிவற்ற பார்வை, தோலில் வெடிப்பு, வீக்கம், சோர்வு, இதயத்தில் ஒருவித இறுக்கம், அதிர்ச்சி, திடீர்க்கோபம், அதிர்ச்சியில் இறப்பு போன்றவை ஏற்படுகின்றன. அடிக்கடி பானம் அருந்துகிறவர்கள் தங்களுக்கு அடிக்கடி சோர்வும், விரக்தியும், வெறுப்பும் உள்ளதா என்பதைப் பரிசோதித்துக்கொள்க. அப்படி இருந்தால் ஆரோக்கியமான உடலில் பானம் மூலம் சேர்ந்த சல்ஃபர் டை ஆக்சைடே காரணம்.


  பானங்கள் நறுமணமாக இருக்க காஃபைன் சேர்க்கப்படுகிறது. கோலா பானங்களில் மூன்றில் ஒரு பங்கு என்ற அளவில் காஃபைன் சேர்க்கப்படுகிறது. இந்த அளவு, நாம் தினமும் அருந்தும் காஃபி, தேநீர் போன்றவற்றில் உள்ள அளவிற்குச் சமம். காஃபைன் உண்மையில் போதை தரும் ஒரு மருந்துதான். இது அதிகமானால் மத்திய நரம்பு மண்டலம் அடிக்கடி ஊக்குவிக்கப்படுவதால் விரைவில் தளர்ச்சியும் வந்துவிடுகிறது. குளிர்பானம் ஒரு முறை சாப்பிட்டதும் வரும் புத்துணர்ச்சி நாம் ஒரு நாளில் மூன்று கப் காஃபி அருந்தியதற்குச் சமம். ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று பாட்டில்கள் அருந்தினால் மத்திய நரம்பு மண்டலம் பலவீனம் அடையும்.


  இதனால் தூக்கமின்மை, நரம்புக்கோளாறு, எரிச்சல், வயிற்றுப்பொருமல், மனக்குழப்பம், இதயம் வேக வேகமாகத் துடித்து ஒருவிதப் பதற்றம் முதலியன ஏற்படுகின்றன. சிறுநீர்ப்பைகள், வயிறு முதலியவற்றில் புற்றுநோய், இரத்தக்கொதிப்பு, மேலும் ஆறுவிதமான புற்றுநோய்கள் அடிக்கடி கலர் அருந்துகிறவர்களுக்கு வருகிறது. அடிக்கடி இளவயதில் பானம் அருந்தும் தம்பதிகளுக்குப் பிறவியிலேயே குறைபாடு உள்ள குழந்தைகள் பிறந்துள்ளன.


  ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறத்திலும் குளிர்பானங்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த டார்ட்ராஜைன் என்ற பானத்தை நார்வே, பின்லாந்து ஆகிய நாடுகள் தடை செய்துள்ளன. இந்த வண்ணச் சாயம் தோலுக்கு ஒவ்வாமையைத் தந்து, உடலில் வீக்கம், மூக்கு ஊற்றுதல் (கடுமையான ஜலதோஷம்) கண்கள் சிவப்பாக மாறுதல் ஆகிய விளைவுகளை ஏற்படுத்துகின்றன.


  சிவப்பு நிறபானங்கள் அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன. ஸாஃப்ட் டிரிங்க் பானங்களில் நிறத்துக்குச் சேர்க்கப்படும் இந்தச் சிவப்புச் சாயம் புற்றுநோய், ஒவ்வாமை,

சாப்பிட்ட உணவை அல்லது தயாரித்த உணவை நஞ்சாக மாற்றி விடுகிறது. எனவே அடுத்த முறை குளிர்பானம் அருந்த நினைக்கும் போது அந்த எண்ணத்தைக் கைவிட்டு, இயற்கையான பழச்சாறுகள், இளநீர் போன்றவற்றை அருந்துங்கள். உடலுக்கு நன்மை செய்யும் பானங்கள் இவை மட்டுமே !

 

நன்றி : இனிய திசைகள் ஏப்ரல் 2013

 

பாபர் மஸ்ஜித் வழக்கு தீர்ப்பா ? கட்டப்பஞ்சயத்தா ???

அரேபியாவில் ஆறுகள் ஓடுமா……??

Asalamu Alaikum Warh,  


Dr. Alfred Coroz உலகின் தலைசிறந்த புவியியல் அறிஞருள் ஒருவர். அவரிடம் அரேபியாவின் புவிவள நிலமையினைக் குறித்துக் கேட்கப்பட்டது.

"அரேபியா எப்போதேனும் பசுமையாக ஆறுகள் நிரம்பி இருந்ததுண்டா?" .
எதிர்பாராத ஆனால் நேர்மறையான பதில் அவரிடமிருந்து வந்தது- "ஆம்'! பனியுகத்தில் அவ்வாறு இருந்தது".

அடுத்து ஒரு கேள்வி அவர் முன் வைக்கப்பட்டது:
"எதிர்காலத்தில் மீண்டும் அரேபியாவின் பாலைவனம் பசுமையாகும் வாய்ப்புகள் ஏதேனும் உண்டா…….?" 


ஆச்சர்யமூட்டும் வகையில் அவரிடமிருந்து பதில் வந்தது-

"ஆம்! அரேபியா மீண்டும் பசுமையாக செழித்துவிளங்கவும் ஆறுகள் ஓடவும் செய்யும் என்பது அறிவியல் பூர்வமான எதிர்கால உண்மை தான்!"

ஆச்சர்யம் பொங்க மீண்டும் அவரிடம் கேட்கப்பட்டது: "எப்படி சொல்கிறீர்கள்……?"

"புதிய பனியுகம் நிஜத்தில் தொடங்கி விட்டது. வடதுருவ பனிப்பாறைகள் உருகத் தொடங்கி விட்டன. அவை அரேபிய தீபகற்பம் நோக்கி நகரத்தொடங்கியுள்ளன. இதன் அறிகுறிகளே குளிர்காலங்களில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் நன்குதென்படுகின்றன. இது அறிவியற்பூர்வமான உண்மை"

"இது குறித்து 1400 ஆண்டுகளுக்கு முன்னரே முஹம்மது நபி(ஸல்) அறிவித்து விட்டதை அறிவீர்களா…?

ஒரு நபிமொழி (ஹதீஸ்) இவ்வாறு தெரிவிக்கிறது:

அரேபியா மீண்டும் மேய்ச்சல் நிலங்களாகவும் – ஆறுகள் ஓடக்கூடியதாகவும் ஆகாத வரை இறுதி நாள் (உலக முடிவு நாள்) ஏற்படாது.(Sahih Muslim)

இப்போது சொல்லுங்கள்: 'நபி முஹம்மதுவுக்கு அரேபியா சோலைகளாக ஆறுகளுடன் இருந்ததை யார் அறிவித்திருப்பார்கள்..?

பேராசிரியர் சிறிது யோசனைக்குப்பின் சொன்னார்: "ரோமானியர்களாக இருக்கலாம்"

"நல்லது! மீண்டும் உலக முடிவு நாளுக்கு முன் அரேபியா மேய்ச்சல் நிலமாகவும் ஆறுகள் ஓடக்கூடியதாகவும் ஆகும் என்பதை முஹம்மது நபி(ஸல்) அவர்களால் எப்படி கூற முடிந்தது.?"

உண்மையை எதிர்கொண்ட Dr. Coroz தைரியமாகவும் வெளிப்படையாகவும் சொன்னார்:

"அது நிச்சயம் ஒரு தெய்வீக வெளிப்பாட்டினால் தான் இருக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை.."

மேலும் அவர் சொன்னவை:

"ஒரு எளிய மனிதனுக்கு குர்ஆன் எளிய விஞ்ஞானத்தையே கூறுகிறது. 1400 ஆண்டுகளுக்கு முன் நிரூபிக்க வழியின்றி சாதாரணமாக கருதப்பட்ட அதன் விஞ்ஞான கருத்துக்களை இன்று தான் விளங்க வழியுண்டு என்பது உண்மை தான்.

அப்படித்தான் புவியின் தோற்றம் புவியின் அமைப்புகளை குறித்து குர்ஆனில் கூறப்பட்டுள்ளவைகளை நான் பார்க்கிறேன்.'

Dr.Coroz அவர்கள் விருப்பு வெறுப்பற்று பார்த்த
பார்வையினால் கிடைத்த நிஜம் இது.

"நிச்சயமாக (வேதமாகிய) இது, உண்மையானது தான் என்று அவர்களுக்கு தெளிவாகும் வரையில்,(உலகின்) பல பாகங்களிலும், அவர்களிலும் நம்முடைய அத்தாட்சிகளை அவர்களுக்கு நாம் காண்பிப்போம்; (நபியே!) உமது இரட்சகனுக்கு நிச்சயமாக அவன் ஒவ்வோரு பொருளின் மீதும் (அதுபற்றி நன்கறிந்து) சாட்சியாக இருக்கிறான் என்பது போதுமானதாக இல்லையா?" (அல் குர்-ஆன்: 41:53)

(பி.கு: இக்கட்டுரையை இங்கு பதிவதன் நோக்கம்: 'கோடானுகோடி மக்களால் ஏற்கப்பட்டு பின்பற்றப்படும் குர்ஆனை 'இஸ்லாமிய எதிரிகளின் துணைக்கொண்டு கொச்சைப்படுத்திப் பார்த்து தன் வக்கிர மனத்தை திருப்திப்படுத்திக்கொள்பவர்கள் இனியேனும் 'வெறுப்புணர்வை' கழற்றி வைத்துவிட்டு 'விஞ்ஞானப் பார்வையோ (அ) குறைந்தபட்சம் நேர்மறை பார்வையோ அணிந்து அதைப் பார்க்கட்டும் என்று தான்).

 
__

முகப்பு

Related Posts Plugin for WordPress, Blogger...